tag:blogger.com,1999:blog-4428124593177430120.post6157492563961326303..comments2023-09-21T07:23:18.825-07:00Comments on இறைஅரசு: தமிழ் மகளின் துயர் துடைப்போம்!இறையரசன்http://www.blogger.com/profile/03382296653408138586noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4428124593177430120.post-65383000464211784442014-05-09T00:08:23.100-07:002014-05-09T00:08:23.100-07:00செந்தமிழில் கூடஅன்று, கிராமத்து மக்கள் பேசும் இய...செந்தமிழில் கூடஅன்று, கிராமத்து மக்கள் பேசும் இயல்பான தமிழில் பேசினால் கூட நகையாடும் தமிழன் திருந்தினால் தன் தவறுகளைத் தமிழன் உணர்ந்தால் மட்டுமே தமிழும் தமிழனும் வாழமுடியும் .ஊர்கூடி<br />தேர் இழுத்தால் மட்டுமே தேர் நிலை வந்து சேரும் .பாரதிதாசன் முழ்ங்கியது போல் எம் மொழியைக் கற்றாலும் தமிழை உயிராய்க் கொள்வோம் .தமிழைத் தேனே என நினை அது தாலாட்டும் உனை. ponnusamyhttps://www.blogger.com/profile/01673795631277947519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4428124593177430120.post-18869130771996810662013-07-11T13:53:56.499-07:002013-07-11T13:53:56.499-07:00நம்மால் முடிந்தது என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ...நம்மால் முடிந்தது என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ?<br /><br />௧.முதல் நிலையாக நம் வீடுகளில் நல்ல தமிழில் பேசுவோம் என முடிவெடுப்போம்.<br /><br />௨. நம் வீட்டுக் குழந்தைகளை ,வீடுதோறும், ஆத்திச் சூடி , நாலடியார், கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்களை கற்றுத்தருவோம்.<br /><br />௩.தமிழ் மறையாம் திருக்குறளை ஓதுவோம்.<br /><br />௪.சந்தக் கவிகளைத் தேர்ந்தெடுத்து தமிழின் இனிமையைப் பருகி மகிழ்வோம்.<br /><br />௫. நாத்திகம்,சாதி, மதம், எனப் பாராது எங்கிருந்தாலும் நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிப் பரவுவோம்.<br /><br />௬. கவிஞர்களை நல்ல தமிழில் எழுத வைப்போம்.<br /><br />௭. இறை வழிபாடு செய்வோர் நல்ல தமிழில் அவரவர் முறையிலும், தொடர்புடையோரைத் தீந்தமிழில் உள்ள திருமுறைகளும், திருவாய்மொழிகளும், ஓதச் செய்து, ஓதவும் செய்வோம்.<br /><br />௮.சாதி மத மோதல்களை நல்லிணக்கத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு ஊதி ஊதி பெரிது படுத்தாமல் சமூகக் கடமையாக அனைவரும் கூடித் தீர்த்துவைப்போம்.<br /><br />௯. அரசியலில் இருந்து சாதி, மதங்களை விரட்டி அடித்து, அவைகளைத் தனிப்பட்ட முறையில் அவரவர் வீட்டில் விட்டு அரசியல் கலவாது நமக்குள் , ஒருவரை ஒருவர் அன்புடன் சமமாக நடத்தி வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.<br /><br />௧௦. பல இனங்கள் , பல மொழிகள், பலவேறு பண்பாடுகள் நிறைந்த நாட்டை அண்ணல் அம்பேத்கர் கட்டி எழுப்பிய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குத் தந்த அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமைகளை போராடிக் காப்போம். இந்த அரசியல் அமைப்புச் சட்ட உரிமைகளை முன்னிறுத்தி சமூகப் பண்பாடாக, தமிழ் நாட்டையும், இனத்தையும் தமிழையும், ஒன்றுபட்டு காப்போம்.<br /><br />௧௧ . குடிகெடுக்கும் அரசாக இல்லாமல் குடிகளைக் காக்கும் அரசாக மாற்றி, ஏழை எளிய மக்களை அழிக்கும் மது அரக்கனை ஒழிக்கும் அரசைத் தேர்ந்தெடுப்போம்.<br /><br />௧௨ . தரமான கல்வியை எளிய மக்களும் பெற வழி செய்வோம் .<br /><br />௧௩ . அண்டை மாநிலங்கள் காட்டும் வழியில் கல்வியில் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்குவோம்.<br /><br />௧௪ . இவைகளை ஏற்கும் நல்ல தலைவர்களை உருவாக்குவோம். அவர்களைமட்டும் ஏற்போம்.<br /><br /><br />நம் இழி நிலையால் நமது மலைகள், கடற்பரப்பு, ஆறுகள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் உள்ளிட்ட எல்லா இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் , மின்வெட்டு, இன்னும் எண்ணிக்கையற்ற கேடுகளால் நாமோ அழிவை நோக்கி .....<br /><br />நமக்கு வரவேண்டிய ஆற்று நீர், மின் சக்தி, அடிப்படை உரிமைகள் கூட நமக்கு மறுக்கப்படுகின்றன .<br /><br />மிக விரைவில் தமிழ்நாடு நீரற்ற பாலைவனமாக நாமே மாற்றி அழித்துக் கொண்டும் இருக்கிறோம்.<br />இப்படி பல்வேறு அழிவுகளிலும் ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு பிரிந்து கிடக்கும் இனம் உலகில் தமிழ் இனம் மட்டுமே.<br /><br />நுனி மரமேறி அடிமரம் வெட்டும், இம்மாக்கள் தன்னை, மொழியை, இனத்தை அழிப்பதில் முன் நிற்கிறார்கள்.<br /><br />அழிவின் விளிம்பில், அழிவின் நடுவில் வாழும் நாம் இப்போதாவது விழித்தால் பிழைத்தோம். இல்லையெனில் .......<br /><br />நமது வருங்கால சந்ததிகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.<br /><br />எனவே இதுவே நம் மக்களுக்கு வேண்டிய அரசியல் ஆகும். இதுவே நமது அரசியல் வாதிகளின் மறந்துபோன கடமையாகும்.<br /><br />நமது அரசியல் கட்சிகளும் , அரசியல்வாதிகளும் தனது கட்சிகளின் அடிப்படை அரசியல் கொள்கைகளாக ஏற்கவைப்போம்.<br />நாம் அனைவரும் ஒன்று பட்டுத் தலைவர்களை நேரில் சந்தித்து நினைவுபடுத்தி இவைகளை அரசியலாக முன்னெடுக்க வேண்டுகோள் விடுப்போம்.<br /><br />நமக்கு நாம்தான் தீர்வு. வெளியில் இருந்து அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.தஞ்சை கோ.கண்ணன்https://www.blogger.com/profile/18250622155740535642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4428124593177430120.post-26425966035898453982013-07-11T13:51:33.705-07:002013-07-11T13:51:33.705-07:00This comment has been removed by the author.தஞ்சை கோ.கண்ணன்https://www.blogger.com/profile/18250622155740535642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4428124593177430120.post-91076111347545326012013-07-10T22:31:23.338-07:002013-07-10T22:31:23.338-07:00ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
//ஒரு கோடி ர...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...<br /><br />//ஒரு கோடி ரூபாய்க்கு ஆங்கில அகராதி வாங்கித் தருகிறது. தமிழ் அகராதி ஒரு பள்ளியிலும் கிடையாது; பிள்ளைகளுக்கும் சரி, தமிழ் ஆசிரியர்களுக்கும் சரி பல அருஞ்சொற்களுக்குப் பொருள் தெரியாது.//<br /><br />இதற்கு தமிழக அரசுதான் வெட்கித் தலைகுனிய வேண்டும் ஐயா...<br />மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4428124593177430120.post-30686615953820737472013-07-10T20:13:42.396-07:002013-07-10T20:13:42.396-07:00அன்புசால் பேரசிரியர்க்கு,
வணக்கம். பலரது எண்ணக்கிட...அன்புசால் பேரசிரியர்க்கு,<br />வணக்கம். பலரது எண்ணக்கிடக்கைகளைத் தாங்கள் உணர்ச்சிக்கரமான கட்டுரையாக வடித்துள்ளீர்கள். தாய்தமிழின்பால் நிகழ்ந்துவரும் தாக்குதல்களை முறியடிக்கத் திட்டமிட்டப் பணிகளை மேற்கொள்ளல் காலத்தின் கட்டாயமாகும். தமிழில் பெயர் சூட்டுதல், தலையெழுத்தைத் தமிழில் எழுதுதல் போன்ற சிறு சிறு முயற்சிகளில் முதலில் ஈடுபடுவோம். இந்தப் பணியினை மலேசியாவில் யான் ஓரளவு ஆற்றி வருகின்றேன். மேலும் ஆக்ககரமாகத் தமிழ்ப் பணியாற்ற தங்களது கட்டுரை அருமருந்தாக அமைந்துள்ளது. வாழ்த்துகள்.<br />ம. மன்னர் மன்னன், விரிவுரையாளர், மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா Mannar Mannan Maruthaihttps://www.blogger.com/profile/17358570846117837911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4428124593177430120.post-27822635785747253842013-07-10T20:04:56.579-07:002013-07-10T20:04:56.579-07:00நல்ல கட்டுரை! மிகுந்த பாராட்டுகள்! பல்லாயிரக்கணக்...நல்ல கட்டுரை! மிகுந்த பாராட்டுகள்! பல்லாயிரக்கணக்கானவர்கள் இதனைப் படித்துப் பார்த்தாவது தங்களைத் திருத்திக்கொள்ள முயல வேண்டும். முதற்கண் தமிழாசிரியர்கள் குழந்தைகளுக்குச் சரியான ஒலிப்பைச் சொல்லித்தரவேண்டும். கல்வியின் முதல் அடையாளம் தெளிவாகத் தமிழ் பேசத்தெரிதல்.செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.com