Thursday, June 17, 2010

சிங்கப்பூரில் கவிமாலை



http://www.dinamalar.com/nri/More_picture.asp?News_id=4391&lang=ta&news_head=சிங்கப்பூரில்%20கவிமாலை%20இலக்கிய%20நிகழ்வு&detectflash=false

ஜலான்புசார் : மாதந்தோறும் நடைபெறும் கடற்கரைச்சாலைக் கவிமாலை நிகழ்வு மே 29ம் தேதியன்று சிங்கப்பூர் ஜலான்புசார் சமூக மன்ற அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்க அங்கமாக யாப்பு இலக்கண வகுப்பு, ந.வீ.விசயபாரதியால் நடத்தப்பட்டது. பின்னர் இணையதள எழுத்தாளர்கள் தருமி, பிரபாகரன் ஆகியோர் தங்கள் அனுபவங்களை எடுத்துரைத்தனர். இவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டது. இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு : ' குற்றவாளி'. இப்போட்டியில் வள்ளியம்மை சுப்பிரமணியம், பீஷான் கலா, மலர்விழி,லலிதா சுந்தர், அகிலமணி ஸ்ரீவித்யா ஆகிய பெண்பாற் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களில் கவிஞர்கள் வள்ளியம்மை சுப்பிரமணியம், மருதமலை, புருஷோத்தமன் ஆகியோர் ரொக்கப் பரிசு பெற்றனர். 
கவிஞர்கள் பாலமுருகன், பறவாக்கோட்டை அண்ணா, ராசூ கலைவேந்தன் ஆகியோர் புத்தகப் பரிசும் பெற்றனர். தமிழரும் இலக்கியமும் என்ற தலைப்பில் முனைவர் பா.இறையரசன் சிறப்புரையாற்றினார். சிங்கையில் இலக்கிய ஆர்வலர்களிடை தமது இணையதளம் மூலமாக சிறந்த இணைப்புப் பாலமாக விளங்கி இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் கலைக்குமாருக்கு, மா.அன்பழகன் பொன்னாடை போர்த்தி பாராட்டிச் சிறப்பித்தார். தமிழக எழுத்தாளர் கவிதா ஆல்பர்ட், சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததோடு கவிமாலை அமைப்பின் பணிகளைப் பாராட்டி உரையாற்றினார். யோகா விஞ்ஞானம் பற்றி ஜீனத் சரவணன் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியைக் கவிஞர் பாலு மணிமாறன் சுவைபடத் தொகுத்து வழங்கினார். சிங்கையின் மூத்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
-- 

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers