Tuesday, March 8, 2011

கணினியில் ஆரியச் சூழ்ச்சி


கணினியில் ஆரியச் சூழ்ச்சி
-முனைவர் பா. இறையரசன்


தமிழ் எழுத்துகளே தாய்

குமரிக்கண்டத்தை அடுத்துத் தோன்றிய சிந்துநாடு (இந்தியா) முழுதும் குறிப்பாகத் தென்னாட்டின்  குகைகளிலெல்லாம் ஆசீவக அல்லது சமண அல்லது புத்த மத முனிவர்கள்  தங்கியிருந்தனர். தங்கியிருந்தவர்களின்  பெயர்களும், தங்கியிருந்தவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் , உதவிய வகையும் பிறவும் ஆங்காங்குள்ள கல்வெட்டுகளில் தமிழி எழுத்துகளில்  பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்தை  வடநாட்டில் பிராமி எழுத்துகள் என்று குறித்தனர். எனினும் அசோகன் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துகளில் வடமொழியிலுள்ள வல்லின எழுத்து களுக்கான வருக்க எழுத்துக் குறியீடுகள் உள்ளதாலும், தமிழ் நாட்டிலுள்ள இந்தக் கல்வெட்டுகளில் அந்த வருக்க எழுத்துக் குறியீடுகள் யாண்டும் காணப்படாததாலும், மேலும், சிறப் பாகத் தமிழ் மொழிக்கே  உரிய ற,   ன, ழ, எ, ஒ   ஆகிய எழுத்துகள் காணப்படுவதாலும் இதனைத் தமிழி என்று பெயரிட்டு வழங்கி வருகின் றனர். 

இந்தத்  தமிழ் எழுத்து நிலை யிலும், காலத்தால் முந்தியவை  தாமிழி என்றும், திராவிடி என்றும், பிற்கால எழுத்தைத் தமிழி என்றும் வழங்கி வரு கின்றனர். ஆரியச் சார்பினர் தமிழ் அல்லது தமிழி எனக்குறிக்க விரும் பாமல் வடபிராமி, தென்பிராமி (திராவிடி) என்றே கூறிவருகின்றனர்.

வர்த்தமானர்  கி.மு.527  இல் கால மானார். அவருக்குப் பல ஆண்டுகட்குப் பிறகு  (கி.மு. 317 _ 297)  பத்திரபாகு முனிவர் தலைவரானார். இவர் மோரிய சந்திர குப்தரின் ஆசிரியராவார்.  இவர் மகத நாட்டில் 12 ஆண்டுகள்  வற்கடம் தோன்றுவதை முன்னறிவித்துத் தமது   மாணாக்கருடன் தென்னகம் வந்தார். கன்னட நாட்டில் சரவண வெள்ளைக் குளம்  (சரவண பெல கொலா) என்ற இடத்தில் தங்கினார். 

அவர் சீடரில் ஒருவர் விசாகர். இவர்  பாண்டிய நாட்டில் சமயம் பரப்பினார்.  கி.மு. 297 இல் பத்திரபாகு முனிவர் வடக் கிருந்து (சல்லேகனை  செய்து) உயிர் விட்டார். அரிசேனரின் பிருகத்கதாவி லும், தேவசந்திரரின் கன்னட இராஜா வளியிலும் இவ்வரலாறு சொல்லப்பட் டுள்ளது. சந்திரகிரியில் பத்திரபாகுவின் குகையும், சந்திரகுப்தரின் புதைவிடமும்  (சமாதியும்) உள்ளன. 

பாண்டி நாட்டி லுள்ள தமிழிக் கல்வெட்டுகள்  கி.மு. 3 ஆம் நூற்றாண்டின.  க என்னும் எழுத்து  அசோகன் கல்வெட்டிலும் தமிழ் நாட்டிலுள்ள  புகழூர்க்  கல் வெட்டிலும் சிலுவைக்குறி  அல்லது கூட்டல்குறி  வடிவில் செதுக்கப்பட்டி ருக்கும். 

மீனாட்சிபுரம் கல்வெட்டு,  அசோகர் கல்வெட்டைவிடக் காலத் தால் முந்தியது  என்னும்  உண்மை எல்லா  அறிஞர்களாலும் ஒப்புக் கொள் ளப்பட்டுள்ளது. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லது சிலுவைக்குறி  காணப்படுமே யானால்,  அதனைக் க  என்று  படிக் காமல்  க்  என்று படிக்க வேண்டிய  நிலை உள்ளது. க என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி  வலப்புறமாகச்  சிறுகோடு  போடப்பட்டிருக்கும்.   

இந்த  எழுத்து வடிவம்  அசோகன் கல்வெட்டிலோ,  புகழூர்க்  கல்வெட்டிலோ  காணப்படு மேயானால்  கா  என்று  நெடிலாகப் படிக்க வேண்டும்.  இந்த வேறுபாடு  நோக்கியும் இதனை  அசோகனுக்கு   முந்தைய எழுத்து  என உறுதி செய்ய லாம்.


வடநாட்டுத் தமிழி எழுத்துமுறை  மாகதி, அர்த்த மாகதி, கரோட்டி எனப் பல சிறுசிறு மாறுபாடுடைய எழுத்து களாக வழங்கின. தென்னாட்டில்  தமிழி எழுத்துமுறையும்  வட்டெழுத்து முறையும் வழங்கின.  

பனை ஓலையில் எழுத்தாணியால் தமிழி எழுத்துகளை மேலும் கீழும் சுழித்து வளைத்து எழுதி யவையே வட்டெழுத்துகளாகும். சமணர் களும் பவுத்தர்களும்  ஆரியர்களுடைய  பாகதமொழியைப் பின்பற்றிப் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளைத்  தம் சமய மொழிகளாக உருவாக்கிக்  கொண்டனர்.   

வேதகாலத்து பாகத மொழி வழக்கற்றுப்  போனதால் பிரா கிருதத்தில் இருந்து   புதிதாகச் செய்யப் பட்ட மொழிதான் சமற்கிருதம்  (சமஸ்: செய்யப்பட்ட; கிருதம்: மொழி)  ஆகும்.  எழுத்து வழக்கற்ற இந்த மொழிகள்  தமிழி எழுத்துகளைக் கொண்டு   ஆரிய ஒலிகளுக்கான  சில குறியீடு களையும் சேர்த்து கிரந்தம் என்ற எழுத்து முறையை கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் உருவாக்கிக் கொண்டன. 

தென்னாட்டில் தமிழி எழுத்துகளைப் பனைஓலைகளில் எழுதிவந்தனர்; வடநாட்டில் இலை அல்லது தோலில் எழுதியதால் இந்தக் கிரந்த எழுத்துகளை மேலே கோடிட்டு எழுதியதால் தேவநாகரி எழுத்துமுறை கி.பி.12ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றியது.

தமிழே தாய்மொழி

இந்தியா முழுவதும் பலுச்சித்தானம் வரை தமிழ் மொழியே வழங்கி வந்தது.  ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசித்தானில் பேசப்படும் தமிழ் மொழிக் குடும்பத்துப் பிராகூய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், வடஇந்திய தமிழ் மொழிக் குடும்பத்திலுள்ளவை ஒரோவன், முண்டா,இராசுமகால்,கூ அல்லதுகோந்த், பத்ரீ, மால்தோ முதலியவை.  

நடு (மத்திய) இந்திய கோலமி, நயினி, , பர்கி, ஒல்லாரி, கூய், கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குரூக், மோசுரா முதலியவை. தென்னிந் தியாவில் தமிழின் கிளை மொழி களாகிப்போன தோடம் (துதம்) , கோத்தம், படுகு, கோண்டு, வடகோலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. 

இவை எழுத்தில்லா மொழிகள். கன்ன டமும் துளுவும்கூட அண்மைக்காலம் வரை எழுத்தில்லாமல் இருந்தன. ஆகவே பர்மா பலுச்சித்தானம் வரை  விளங்கிய தொல்இந்தியா (சிந்து நாடு) முழுதும் தமிழும் தமிழ் எழுத்து முறையும், ஆரியப் படையெடுப்பால் சிதைந்த வட திரிபு (திராவிட) மொழிகளுமே இருந்தன.

வடநாட்டில் நந்தர்  மோரியர் களுக்குப் பிறகு அசோகன் காலத்தில் சமண புத்த மதங்கள் மட்டும்தான் செல்வாக்கோடு இருந்தன.  சங்கம் மருவிய காலத்தில் சமண புத்த மதங்கள் தமிழ் நாட்டினுள் நுழைந்தன. 

கி.பி. மூன்று முதல் ஏழு நூற்றாண்டுவரை இந்தியா முழுவதும் சமண புத்த மதங்கள்  செல்வக்கோடு இருந்ததால்  பாலியும் பிராகிருதமுமே  ஆட்சி மொழியாகவும் விளங்கின. வடநாட்டில்  சாதவாகனர்களும் தென்னாட்டில் பல்லவர் பாண்டியர் ஆகியோரும் சமண புத்த மதங்களை ஒடுக்கி சைவ வைணவ மதங்களையும் சமற்கிருதத் தையும்  வளர்த்தனர். 

எனவே கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல்  7ஆம் நூற்றாண்டு வரை  இந்திய அரசர்களுடைய ஆட்சி மொழியாக  சமற்கிருதமும் எழுத்து முறையாக கிரந்தமும் விளங்கின. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்கள்மொழியாகிய தமிழ்  புத்துணர்ச்சி பெற்றது. மதத்தின் பிடியில்  அரசர் களும் ஆட்சியும் இருந்ததால்  சமற் கிருதக் கல்வியே எங்கும் ஓங்கி இருந்தது. நாளந்தா, காஞ்சிபுரம், எண்ணாயிரம் போன்ற இடங்களில்  சமற்கிருதக் கல்வி நிலையங்களே விளங்கின. 

இவற்றை யெல்லாம் மீறி மக்கள் மொழிகளும் இலக்கியங்களும் வளர்ந்து கொண்டு தான் இருந்தன. கிறித்துவ மதத்தின் மொழியாக இலத்தின்  விளங்கியதையும் மீறி மேலை நாட்டு மொழிகள் வளர்ந் தன. ஆட்சி மொழியாகவும் வணிக மொழியாகவும் ஆங்கிலம் வளர்ந்ததால்  கிறித்துவ சமய மொழியாகவும்  ஏற்கப் பட்டு சமற்கிருதம்போல் இலத்தினும் உலகவழக்கு அழிந்து ஒழிந்தது.  மதப் பற்றின் காரணமாக  சமற்கிருத சொற்களையும் ஒலிகளையும் அதிகம் ஏற்றுக்கொண்ட  மொழிகள்  திரிந்து  திருந்தா  திராவிட மொழிகளாகவும்  வடநாட்டு மொழிகளாகவும் சிதைந்தன. 

தென்னாட்டில்  முதலில் தெலுங்கும்  பின் கன்னடமும்  அடுத்து மலையாள முமாகத் தமிழ் திரிந்தது.  ஆரியக் கலப் பால்  கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குள்ளாக வடநாட்டில் தமிழ் படிப்படியே திரிந்து  வடதிராவிட மொழிகள் ஆயின. கி.பி.9 வாக்கில்  தெலுங்கும் 10 நூ. வாக்கில் கன்னடமும் 12 நூ. வாக்கில் மலையாள மும் தமிழில் இருந்து பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கின. 

சேர  வேந்தர்  குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாகவிருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டுப்  போனதி னால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழி களினுங் கேடாகச் சிதைந்து, மணிப் பிரவாள  மொழியாக  வழங்கி வருகின்றது (செந்தமிழ் சிறப்பு  பக்கம் 99) என்று 

பக்கம் 2

5-03-2011 ஞாயிறுமலர் பக்கம்2

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers