Saturday, November 27, 2010

“மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?”

                
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் அமைந்திருக்கும் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தேறியது. 
தமிழார்வலர்கள் கூடிய இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கெ.பக்தவத்சலம் அவர்கள் வரவேற்புரையில் பேசியதாவது, “தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பாலி மொழி இருந்தது. பின் சமஸ்கிருதமே இந்தியாவில் பெரும்பங்கு வகித்தது. அப்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக வந்ததே உருதுமொழி. சமஸ்கிருதத்திலிருந்து ஜ, , , க்ஷ, ஸ போன்ற எழுத்துகள் மிழுக்கு வந்தன.  தமிழ்மொழியை விட மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிறமொழிக் கலப்பு அதிகமாவே இருந்தது.
தமிழில் வடமொழி கலந்து மணிப்பிரவாள நடையை  சமணர்கள் உருவாக்கினர். இதை இறுதியாக வைணவர்கள் வளர்த்தார்கள். இப்படி பல மொழிகளிலிருந்த சொற்கள் தமிழை ஆக்கிரமித்து வருகின்றன. எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிடும் நீங்கள் இராசாசி எனக் குறிப்பிடுவதேன் என முரசொலிக்கு ஒரு முறை மூதறிஞர் இராசாசி மடல் எழுதினார். இராஜாஜி என எழுதத் தொடங்கினர்.

பவளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வடமொழியாளர் தமிழை மாணிக்கமாகக் கருதினர். தமிழில் பவளம் என்பதை வடமொழியில் பிரவாளம் என மாற்றினர். இது போலவே விளக்கவுரை என்பதை வியாக்கியானம் என்றும், பாயிரம் என்பதை பிரவேசம் என்றும், வேட்டியை வேஷ்டி எனவும் மாற்றினர். பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை  ஷாட்க்ஷி என்று எழுதிவந்ததை மாற்றி  சாட்சி என எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழுக்குள் ஆங்கிலம் புகுந்துவிட்டது. இன்று தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தில் கூட அர்ஜூனனும், பீமனும் தமிங்கிலத்தில் பேசுவது தாங்க முடியாத ஒன்றாகும். எனவே தமிழர்களாகிய நாம் பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுவதோடும் பேசுவதோடும் தமிழ் அழிவைக் காப்பதும் நமது கடமையாகும்என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் பா.இறையரசன் பேசியதாவது,     “1930-களில் தமிழிசை வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள்  போராட்டம் நடத்தியதைக் கண்ட மற்ற மொழியினர் இவர்களுடைய மொழியில் இசையே இல்லையா? எனக் கேலி பேசியதுண்டு. தமிழார்வலர்களாகிய நம்மை தமிழ் உணர்ச்சி மட்டுமே வழி நடத்துகிறது. நாடெல்லாம் நடந்து தமிழைப் பரப்பிய அக்கால ஆழ்வார், நாயன்மார்களாலும் , பிற்காலத்தில் பெரியார் போன்றவர்களாலும் தமிழ் மொழியும் இனமும் பாதுகாக்கப்பட்ட. ஆனால் இன்றோ தமிழின் நிலை தலைகீழாகிப் போனது.
நான் ஆத்திகன்தான், அதற்காக சமற்கிருதத்தை விட தமிழ்மொழி குறைந்தது இல்லை. தமிழ் தாத்தா என அழைக்கப்பெறும் உ.வே.சாமிநாத ஐயரிடம் வணக்கம்என்று கூறினால் நமஸ்காரம்என்று கூறுங்கள் என்பார். கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் ராமாயணம், மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றன. நம்மை வேதம் படிக்கக் கூடாது என்றனர். வேதம் கி.பி.14-ல்தான் எழுதப்பட்டது.
 இன்று படிக்கின்ற குழந்தைகள் “Thosaiyamma thosai” என ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படிக்கும் அவல நிலை உள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டாமா? வடமொழியை தேவ பாஷை என்றும் தமிழை நீச்ச பாஷை என்றும் கூறி வந்தனர் சிலர். இவர்கள் தமிழில் சமற்கிருதம் கலந்து மணிப்பிரவாள நடையை ஏற்படுத்தினர். சோற்றை சாதம் என மாற்றினர்.
தமிழை வளர்க்க வேண்டும் என்கிறீர்களே, வளர்ப்பதற்கு அது என்ன தாடியா எனக் கேலி பேசுகிறார் திரைக்கவிஞர் வாலி.
அன்று சமற்கிருதம் வந்து தமிழைக் கெடுத்தது போல் இன்று ஆங்கிலம் தமிழில் புகுந்து தமிங்கலம் ஆகிவிட்டது. ற, , , ஒ என்ற இந்த ஐந்து எழுத்துக்களையும் கிரந்த எழுத்தில் சேர்க்க வேண்டும் என ஒருவர் முயல்கின்றார்; இன்னொருவர் 26 கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்க்க வேண்டும் என்கின்றார்.
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்றனர். தமிழனுக்கு இரண்டு குணம். ஒன்று ஒற்றுமையின்மை, மற்றொன்று காட்டிக் கொடுத்தல்.
ஆரிய இதழான அமுத சுரபியில் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலேஎன்ற பாடலை ஸெந்தமிழ் நாடெனும் போதினிலேஎன எழுதி தமிழை இழிவுபடுத்துகின்றனர். மேலும் கலைஞர், திருமா, வைகோ, சீமான் போன்றோரை ஈழ மக்களின் துரோகி என எழுதி தமிழர்களுக்குள் கலகம் மூட்டுகின்றனர். மாவீரன் முத்துக்குமார், ஈழத்தமிழரைக் காக்க இறந்தபோது தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட வரவில்லை. எனது கனவெல்லாம் இனி தமிழை அறிவியல், கணினித் தமிழாக மாற்ற வேண்டும் என்பதேஎனப் பேசினார்.
இறுதியாகத் தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் பேசியதாவது : 
தமிழ் இன வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்விது. இணைய இதழான நட்பூபோன்ற இதழ்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றி வருகின்றன. கிரந்தம் என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல்மொழி எழுத்துக்களை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால் நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமற்கிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.
மணிப்பிரவாள நடைக்காக தமிழ் எழுத்துகளில் க1, 2, 3, 4 என்பது போல் 26 கிரந்த எழுத்துக்களைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, , , , ன ஆகிய தமிழ் எழுத்துக்களையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காக்க்  கருத்துரு அளிக்கப்பட்டது.  இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகவும் கதை கூறப்பட்டது. மேலும் தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துக்களைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்துவதுதான் இதன் உள்நோக்கம்.

இப்பொழுது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் பஸ், ஜாமின், மிக்ஸி, ஜாம், ஷவர் முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்துவிட்டன. ஜ சில இடங்களில் (ஜமுனா யமுனா என்பது போல்) ய என மாறும். (ஹரி என்பது அரி எனப்படுவது போல்) ஹ என்பது அ என மாறும்.  இவ்வாறு உரிய முறைக்கேற்ப பெயர்ச் சொற்களை மட்டும் இவ்வாறு எழுதிவிட்டுப் பிற சொற்களை உரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி புஜம் தோள், ஸர்ப்பம் பாம்பு, ஸந்தோஷம் மகிழ்ச்சி, லஷ்மி திருமகள், ஹர்த்தால் மறியல் அல்ல்து கதவடைப்பு, ஸ்ரீநகர் திருநகர் என எழுத வேண்டும்.  

      இன்றைய தலைமுறையினர் தமிழில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள் பிள்ளைகள்கூட அவ்வாறுள்ளனர். இந்தச் சமுதாய அவலத்தின் எடுத்துக்காட்டுதான் கலைஞரின் குடும்பத்தினரும் சன் டி.வி., சன் பிக்சர்ஸ்,ரெட் ஜெயண்ட், க்ளவுடு நைன் எனப் பெயர் வைத்துள்ளார்கள்;  பாரே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி நிறுவனங்கள், படத் தலைப்புகள். கதைப்பாத்திரங்களின் பெயர்கள் என அனைத்திலும் தமிழ்ப் பெயர்களையே வைக்க வேண்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாடு உள்ளதால்தான் பிற மொழிப் பெயர்களைக் கையாளுகிறோம். எனவே பாட நூல்களில் தமிழ் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் புகுந்துள்ளதை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தஒழிப்பு இயக்கம் நடத்தியாவது நாம் வெற்றி காண வேண்டும்- என இலக்குவனார் திருவள்ளுவன் பேசினார்.
      இறுதியில் கேள்வி நேரம் வந்தது. வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு, மொழிச் சீர்திருத்தம் பற்றியும், மொழி வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் தமிழினை எவ்வித வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பதுபற்றியும் காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தினர். கூட்டத்திற்கு வந்திருந்த ஐம்பது பேரில் 48 பேர் முதியவர்கள் என்பதால் அடுத்த முறை இளைஞர்களை இணைக்க வேண்டும் என்றும், தமிழுக்கு உரியவற்றைச் செய்யாத ஆட்சியாளர்கள், பிறமொழிகளைத் திணிப்பவர்கள், எதிர்க்காத பொதுமக்கள் என இருக்கும் வரை தமிழ் முன்னேற முடியாது என்ற பேச்சுக்கள் அனல் வீசின. வந்த ஒரு தமிழார்வலர் ஆட்சி, அலுவல், நீதிமன்றம் போன்ற இடங்களில் ஆங்கிலமும், வடமொழியுமே ஆட்சி செய்கின்றன, தமிழுக்கு மதிப்பில்லை என குறைபட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் 1967-லிலேயே தமிழ் ஆட்சிக்கு வந்துவிட்டது. 43 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (அதுவும் 100க்கு  20 பேருக்கு) அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
இரண்டு தெலுங்கன் சந்தித்தால் தெலுங்கில் பேசுகிறான், இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறான். இரண்டு தமிழன் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறான். தமிழன், தமிழில் பேசுவதை என்று உயரியதாக நினைக்கிறானோ  அன்றுதான்  தமிழ் வாழும். இல்லையேல் பாரதி கூற்றுக்கிணங்க மெல்ல தமிழ் இனி (தமிழனால்) சாகும்!!

நன்றி: “நட்பூ” இணைய இதழ் – 24-11-2010 திரு க.சித்திரசேனன்  செய்திக்கட்டுரை.

No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers