Saturday, May 15, 2010

Historical Tour-1

                            சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம் !


எங்கள் வரலாற்றாராய்ச்சிப் பயணத்தின் முதல் நிலையாக மே திங்கள் 14 - ஆம் நாள் மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானத்தில் ஏறிச் சிங்கப்பூர் நோக்கிப் பயணம் செய்தோம்.

பயணத்தின் தொடக்கத்திலேயே, தஞ்சை உறத்தநாடு அருகில் அமைந்த அழகிய சிற்றூரான தென்னவ நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் திரு செல்வராஜ் அவர்களை , அவரது இளைய மகள், பெயரனுடன் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றோம் ! சந்திப்புகளே வாழ்க்கை என்ற தத்துவத்தின்படி பண்பாட்டுக்குத் தமிழன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பவன் என்ற செய்தி எங்களை வந்தடைந்தது.

அவரது இளைய மகள் அபிராமி தஞ்சையில் ஸ்டெம் செல் காப்பு நிறுவனம் நடத்திவருபவர். அவர் கூறிய ஒரு நிகழ்வையே உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

அமெரிக்க நாட்டில் நல்ல பணியில், நல்ல நிலையில் வாழ்க்கை நடாத்தி வந்த தமிழன்பர் தவறுசெய்த தன் பிள்ளையைக் கண்டித்தார். மிரட்டலையே அடித்ததாக மாற்றி காவலரிடம் மகன் சொல்ல, அப்படியில்லை என விளக்கி உண்மை நிலை உணர்த்த பெரும்பாடு படவேண்டி வந்தது. பெற்ற தாயோ தந்தையோயாயினும் தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொள்ளப்படும் .

இதற்கு அந்தத் தமிழன்பர் ஒரு வாழ்நாளில் எடுக்க வேண்டிய முடிவையன்றோ எடுத்தார் ! போதும் இந்த போலி வாழ்க்கை ! குழந்தைகளுக்குப் பண்பாட்டுத்தாக்கத்தின் ஆரம்ப நிலையே இதுவென்றால்.....மூட்டை முடிச்சுகளுடன் தமிழ்நாடு திரும்பியே விட்டார் ! அமெரிக்காவின் செல்வச் செழிப்பான வாழ்க்கைமுறைக்கு முழுக்கும் போட்டார்! பிள்ளையை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் போதும் என்ற முடிவுக்கும் வந்தார். தமிழன் தன் பண்பாட்டைக் காக்க எதுவும் செய்பவனே என்று காட்ட இதைவிட வேறென்ன எடுத்துக்காட்டு நமக்கு வேண்டும்?

நம் வரலாற்றாசிரியர் செல்வராஜ் அவர்களின் இளைய மகள் பற்றிக் கூறியே ஆகவேண்டும். சென்னையில் அவரும், சிங்கப்பூரில் அவரது தமக்கையும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்தாலும் அவர்களது வேர் அவர்களது ஊரிலேயே ! இந்தச் சிறிய வயதில் அவர் தன் தாயை இழந்தாலும் வசதி வாய்ப்புக் குறைந்த தகுதியுள்ள இரு பெண்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவர்களை எம்.எஸ்ஸி., பயோடெக் படிக்க வைத்து தன் குழுமத்திலேயே பணியும் கொடுத்திருகிறார் இந்த இளம் தமிழ்ப் பெண்மணி! ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு நம் தமிழ்க்குடி தொல்குடியே என உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்ற எங்களது கூற்று அவரை மேலும் தமிழின் பால் ஈர்த்தது. 2009- ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மிக அதிகமாக விரும்பிப் பார்க்கப்பட்ட நிகழ்ச்சி இந்தியத் திரு நாட்டினைப்பற்றி மைக்கேல் உட்சு என்பவர் டிஸ்கவரி அலைவரிசையில் வழங்கியதாகும். இந்த நிகழ்ச்சியில் கூறிய செய்தி: 5000 -ஆண்டுகளுக்கு மேலான மம்மியிடமிருந்து கிடைத்த மரபணுவும், உசிலம்பட்டியிலே இன்று வாழும் சில தமிழ் மக்களின் மரபணுவும் 100 விழுக்காடு (MAPPING OF GENES) ஒத்துப் போவதாகக் கண்டறியப் பட்ட அறிவியல் முடிவே அது.

விமானத்தில் உடன்வந்த சென்னை மாவட்ட நீதியரசர் ஒருவர் நாங்கள் கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு வர விரும்புவதாகக் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சிங்கப் பூரின் சாங்கி பன்னாட்டு விமான நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு இளங்குமரன் என்கிற சகாயராசு எங்களை வரவேற்று மகிழ்ந்தார். ஒளிப் படங்களும் எடுத்துத் தள்ளினார். அன்னாரின் விருந்தோம்பலை அனுபவித்து மகிழ்ந்தோம் அவர் பேராசிரியர் இறையரசனாரின் மாணாக்கரே !

தரமான சாலைகள் கார் வழுக்கிக்கொண்டே 120 கி. மி. வேகத்துக்கு மேல் சென்றது. இருமருங்கிலும், சாலையின் நடுவிலும் உயர்ந்து நிற்கும் மரங்கள் , அடுத்தடுத்து புல் வெளிகள். ஒளியை வெள்ளமெனப் பாய்ச்சும் விளக்குகள் !

சிங்கை நாட்டின் உட்லண்ட்ஸ் குடியிருப்புப் பகுதியை நாங்கள் வந்தடையும் போது இரவு மணி 10.30.

அவரின் இல்லத்தரசியும், மகள் யாழினியும், மகன்கள் இளம்கதிர் , இலக்கியன் ஆகியோரும் காத்திருந்து வரவேற்று மகிழ்ந்தனர் . இரவு விருந்து முடித்து அளவளாவிப் படுக்கைக்குச் செல்லும் போது இரவு மணி 1.00 !


நாள் – 2 : 15-05-2010

தமிழுலகம் மின்குழுமத்தின் மட்டுறுத்தர் ஐயா ஆல்பர்ட் அமெரிக்காவிலிருந்து எங்களை அழைத்துப் பேசி உலகத்தரமுள்ள ஆங்கிலத்தில் தமிழ் நாட்டு வரலாறு நாங்கள் வெளியிட இருப்பது அறிந்து மகிழ்ந்தார் ! பாவாணர் குடும்பத்திற்கு நிதியுதவி கிடைக்க இவர் செய்துவரும் இடைவிடாத முயற்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனுக்குடன் தகுந்த நண்பர்களையும் அரசு அதிகாரிகளையும், அமெரிக்க நேரப்படி வேறுபடுகின்ற இரவுபகல் பாராது எத்தனை தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு ஆவன செய்திருக்கின்றார். இவரைப் பாராட்ட எங்களுக்குச் சொற்கள் கிடைக்கவில்லையே என்று தடுமாறினோம். ஆனால் அவரோ, பாவாணர் குடும்பத்திற்குச் செய்கின்ற உதவிகளுக்கு இடையே சிலர் செய்கின்ற இடையூறுகளையும் எண்ணி வருந்தினார்.
எங்கள் வரலாற்றுப்பணி தொடர்பான பயணத்துக்கு வாழ்த்தையும் அதற்குத் தேவையான நண்பர்கள் முகவரிகளையும் அளித்து உதவினார்.

அவர் அமெரிக்காவில் இருந்தபடியே , நாமக்கல் அருகே சங்கக்காலச் சிற்றூர் அமைக்க எண்ணிய செயலை நாங்கள் எண்ணி எண்ணி வியந்தோம். பேராசிரியர் அவர்களிடமும் கலந்தாலோசித்துச் செய்கிறார்கள்.
இன்று மாலை இளங்குமரன் வீட்டுக்கு அருகே உள்ள நூலகத்திற்குச் சென்று வந்தோம் . மிக அழகிய சூழலைக் கொண்ட மிகப்பெரிய நான்கடுக்கு மாடி கொண்ட நூலகம். ஆனால் இது உட்லண்ட்ஸ் வட்டாரத்தின் கிளை நூலகமாம்!


        - முனைவர் பா.இறையரசன், கோ.கண்ணன், இளங்குமரன்

Monday, April 5, 2010

கெட்டிமுத்து
கேளப்பன்
கொங்கணன்
கொங்குவேள்
கொங்குநாடன்
கொண்டல்
கொல்லிவளவன்
கொல்லிவேள்
கொழுந்து
கொளஞ்சியப்பன்
கொளஞ்சியரசன்
கொளஞ்சியண்ணல்
கொளஞ்சியழகன்
கொளஞ்சிமுருகன்
கொளஞ்சிக்கொழுந்து
கொற்கைத்துறைவன்
கொற்கைப்பாண்டியன்
கொற்கைமாறன்
கொற்கைமுத்து
கொற்கைவேலன்
கொற்றவன்
கொற்றங்கொண்டான்
கொன்றைவேந்தன்
கொன்றைவேய்ந்தான்
கோச்சடையான்
கோச்செங்கணான்
கோட்புலி
கோட்புலிநம்பி
கோப்பெருநற்கிள்ளி
கோப்பெருஞ்சடையன்
கோப்பெருஞ்சோழன்
கோப்பையன்
கோபாலன்
கோமகன்
கோமதிநாயகம்
கோமான்
கோயில்பிள்ளை
கோலப்பன்
கோவலன்
கோவிந்தன்
கோவேந்தன்
கோவைவாணன்
கோவைச்செல்வன்
கோதைமார்பன்
கோதைமாறன்
கோனேரியப்பன்
கைலைஇறைவன்
கைலைமன்னன்
கைலைவேந்தன்

Tuesday, March 30, 2010

Friday, February 19, 2010

பூண்டி வாண்டையார்


இன்ப வாழ்வு
முதற்பதிப்பு 1977
பதின்மூன்றாம் பதிப்பு 2009
ஆசிரியர்
கல்விக்காவலர் கி.துளசிஅய்யா வாண்டையார்

இன்ப வாழ்வு முத்துக்களில் சில........

0***************
பயிற்சியா, நேரமேது?
ஆம்! பேச, சுற்ற, வம்பளக்க நேரமிருக்கும்.
ஆனால், உடலைக்காக்க 24 மணி நேரத்தில் அரை மணி நேரம் கிடைக்காது!
0*****************

25 நிமிடங்கள் ஆசனப்பயிற்சியோடு நாளைத் துவங்குங்கள்.
0*****************

காலை உணவு, மதியம், இரவு காலத்தோடு உண்டால் நலம்.
நேரத்தில் உண்ண முடியாதவர்கள் உடல்நலம் பாதிப்பு இல்லாமல் உண்ணப் பழகுங்கள்.

0****************

நீங்கள் இருக்கிற இடத்தையும் சுற்றுப் புறத்தையும் துப்புரவாக வைத்துக்கொள்க.

0****************

மூச்சுப் பயிற்சி உயிருக்குத் தேர்ச்சி!


*************************************************************************************



செம்மொழிச் செம்மல்கள் நூலுக்கு வாழ்த்துரை



அன்புடையீர்!
தமிழ்க்காத்து வளர்த்தவர்களை
யார் யார் என்று குறித்து
எழுதி இருப்பது நினைவுப் பொருத்தம்.
ஏதாவது செய்ய வேண்டும்
அது நல்லதாக இருக்க வேண்டும்
என்ற தங்கள் நல் எழுத்து
இனிமையாக உலாவர வாழ்த்துக்கள்!

அன்பு,
கி.துளசி ஐயா வாண்டையார்,
செயலாளர்& தாளாளர்,
அ.வீரையா வாண்டையார் நினைவு புட்பம் கல்லூரி,
பூண்டி-613503. தஞ்சாவூர் மா.

Wednesday, February 3, 2010

காவேரி


*"நடந்தாய் வாழி காவேரி !"*
அழிப்பேன் உன்னை காவேரி ! இன்றைய அரசியல் மணல் கொள்ளையர்களின் கொள்கை !
*காவிரித்தாயை வாழ்த்தி வணங்கினர் நம் முன்னோர் ! ஆனால் நாமோ வெளிப்பகையால்,
கருநாடகத்தால் நீரை இழந்தோம் ! கருநாடகத்தின் வெள்ளத்தின் வடிகாலன்றோ காவேரி!

ஆனால் இன்றோ இரக்கமற்ற ஊழல் அரசியல் வாதிகளின் கூட்டுடன் மணல்
கொள்ளையர்களால் காவேரி ஆறு அழிவதை சும்மா வேடிக்கைப்
பார்த்துக்கொண்டிருக்கிறோம் !

பல ஆண்டுகள் சென்று தொட்டியம் முசிறி வழியாக சமீபத்தில் பயணம் செய்தேன். முசிறி
குளித்தலை பாலத்துக்கு மேற்கே 2 கி. மி. தொலைவில் பாதாள காவேரியைக் கண்டு
அதிர்ந்தே விட்டேன்! நெய்வேலி நிலக்கரி வெட்ட பறிக்கும் பள்ளத்துடன் காவேரியின்
பாதாளப் பள்ளம் சற்றும் குறைவானது அல்ல ! தஞ்சைத் தரணியை சேர்ந்த நான் என்
கண்ணீரை அடக்கமுடியாமல் வயிறு பற்றி எரிய அந்த கோரக் கட்சியைக் கண்டு துவண்டேன்
.
*காவேரி ஆற்றில் பட்டப் பகலில் நூற்றுக் கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்க உயர் நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட கன ரக மண் அள்ளும் எந்திரம் (Heavy Earth Movers ) 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டுள்ளது.
ஒரு நாளைக்கு 2500 லாரிகள் மணலைக் கடத்துவதாகவும் ஆனால் 1000 லாரிகள் கணக்குக் காட்டப்படுவதாகவும் ஒரு நாளில் அரசுக்கு ஐம்பது லட்சம் ரூபாய்கள் நட்டம் என்றும் தொட்டியம்
காங்கிரசு MLA ., M . ராஜேந்திரன் ( பார்க்க 3 .1 .10 தேதி** பக்கம் 4 , Times
of India நாளிதழில் ) கூறுகிறார்.*

அரசு வருமானத்தை இழக்கிறது என்றாவது கவலைப்பட ஒரு MLA தொட்டியம் ராஜேந்திரன்
(காங்கிரசு) இருக்கிறாரே !

அ தி மு க MLA ம.சின்னசாமி கூறுவதோ , காவேரி மணல் கேரளாவுக்கு மற்றும் கோவை, நாமக்கல் , திண்டுக்கல் மாவட்டங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.
கரூர் கொள்ளைக்காரன் காவேரி மட்டுமல்லாது அமராவதியிலும் மணலை கொள்ளையடித்து 3 யூனிட்
ரூ.15000 என்று கேரளாவில் "காவேரி மணல் கிடைக்கும்" என பெயர்ப்பலகை போட்டு விற்கிறான் .

கடலில் வீணாகும் தண்ணீரைத் தர மறுக்கும் கேரளத்துக்கு காவேரி மணலைக் கடத்தி
விற்று தமிழகத்தை பாலைவனமாக்கும் துரோகத் தமிழனைத் தூக்கில் போட வேண்டாமா ?

அரசு வருமானத்தை இழப்பது என்பது ஊழலின் ஊற்றுக்கண் ! அதுவல்ல பிரச்சினை! ஊழல் இன்றைய அரசியலின் வழ்வாதாரமன்றோ !

காவேரி முசிறி தாண்டாது ! தஞ்சை அழிவது நிச்சயம்! தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து சாகவேண்டியது தான் ! நிலத்தடி நீர் வற்றி காவேரி பாயும் இடங்கள் பாலைவனமாகாதா ?

கருநாடகத்திடம் காவேரி நீர் கேட்க இந்த கொள்ளை அரசியல் வாதிகளுக்கு யோக்கியதை இல்லை.

தமிழகத்தின் சக்திவாய்ந்த அரசியல் புள்ளிகளால் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி படுகைகளில் மணல் கொள்ளை ஓகோவென நடப்பதாகவும் மதுரை, திருச்சி, சென்னை என மூன்று பகுதிகளாக பிரித்து ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கமான மூன்று கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் S .யுவராஜ் கூறுகிறார்.

Mines and Minerals (Development & Regulations) Act முற்றிலுமாக ஒவ்வொரு சட்டப் பிரிவுகளும் மீறப்படுகிறது.

சென்னை உயர் நீதி மன்ற ஆணைகளும் காற்றிலே பறக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் போன்ற இடங்களில் மட்டும் மக்கள் எதிர்த்து போராடுகிறார்கள். திருச்சி, மதுரை மன்னர்கள் பகுதியில் நீதி மன்றத்தை நாடும் துணிவு மக்களுக்கில்லை.


ஆனால் இன்று 3 - 01 -2010 Times Of India நாளிதழில் விரிவாக தமிழக ஆறுகளில் கேள்விமுறையற்ற மணல் கொள்ளை பற்றி வந்த செய்தி சிறிது நம்பிக்கை அளிக்கிறது. எதையே பொதுநல வழக்காக நடத்தி உயர் நீதி மன்றமோ , உச்சநீதி மன்றமோ ஆணையிட்டு தமிழகத்தின் எதிகாலத்தை வரும் சந்ததிகளுக்கு காக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

கோவிந்தக் கண்ணன்

Wednesday, January 6, 2010

நூல்கள் வெளியீட்டு விழா









----------------------------------------------------------------------
செய்தி:

முனைவர் பா.இறையரசனின் நூல்கள் வெளியீட்டு விழா 03-01-20010 அன்று நடைபெற்றது. தமிழக அரசின் சிறுதொழில் வளர்ச்சித்துறைச் செயலாளர் ப.செல்வம் ஐஏஎஸ் அவர்கள் தலைமையேற்று இறையரசன் அவர்கள் பிரான்சிலிருந்து வரவழைத்த பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் தொகுப்பினை வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தின் வருமானவரித்துறை ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் நூலைப் பெற்றுக்கொண்டார்.

51 தமிழறிஞர்களின் வரலாற்றைக் கூறும் செம்மொழிச்செம்மல்கள் என்ற நூலின் முதல்தொகுதியைத் துறைமுக அதிகாரி செ.துரைராசு வெளியிட, தனித்தமிழ் இயக்க அறிஞர் செம்மல் பெற்றுக்கொண்டார். இரண்டாம் தொகுதியைத் தொலைபேசித்துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட, நடிகர் ராஜேஷ் பெற்றுக்கொண்டார். எக்காலத்துக்கும் உரிய கருத்துக்களை- குறிப்பாக இன்றைக்குள்ள பல சிக்கல்களுக்குத் தீர்வான பல கருத்துக்களைப் பாரத்யார் தம் தலையங்கங்களில் எழுதியுள்ளார் என்றும் செம்மொழி அறிஞர்கள் பிற மொழிகளையும் கற்றிருந்தார்கள் என்றும் நூலாசிரியர் இறையரசன் கூறினார்.

தமிழக வரலாற்றையும் தத்துவங்களையும் விளக்கிய நடிகர் ராஜேஷ், தமிழ் மொழியைக் கற்றால்தான் பிற மொழிகளையும் நன்கு கற்க முடியும் என்றும், தமிழ் நாட்டில் தமிழ் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப் பெற்றால்தான் செம்மொழிச் சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். திரைப்பட இயக்குநர் ராஜசேகர் நன்றியுரை கூறினார்.

செம்மொழித்திட்ட இயக்குநர் முனைவர் இராமசாமி, கல்லூரிக்கல்வி உதவி இயக்குநர் மதிவாணன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் வ.ஜெயபால் ஆகியோர் நூலாசிரியரைப் பாராட்டிச் சால்வை போர்த்தினர். செம்மொழிச் செம்மல்கள் தொடரை வெளியிட்ட இதழாசிரியர் யாணனுக்கு நூலாசிரியர் சால்வை போர்த்தினார்.
------------------------------------------------------------------
patam:1 செம்மொழிச்செம்மல்கள் நூலை ப.செல்வம் ஐஏஎஸ் வெளியிட, வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் பெற்றுக்கொள்கிறார்.
படம்-2:
செம்மொழிச் செம்மல்கள் நூலைத் தொலைபேசித் துறை அதிகாரி கு.அழகர்சாமி வெளியிட நடிகர்ராஜேஷ் பெற்றுக்கொள்கிறார். நடுவில் இருப்பவர் வருமானவரி ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன்.
மேலும் படங்கள் காண : If you are having problems viewing this email, copy and paste the following into your browser:
http://picasaweb.google.com/lh/sredir?uname=iraiarasan&target=ALBUM&id=5362028378574909793&authkey=Gv1sRgCIHS3ZWY9_DgSA&feat=email

Wednesday, December 16, 2009

தமிழினமே!

தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே.
- பட்டினத்தார்
என்னடா சிச்சீச்சீ இந்தநிலை! நெஞ்சத்தைப்
பின்னிஅறத் திருகிஅது பிழிந்திடுதே! தமிழினமே
தன்னினத்தின் துன்புகண்டும்சதைதுடித்துபதைபதைக்கா
உன்னைப்போல் செத்தஇனம் உலகத்தில் வேறிலையே!
நன்றி: தெளிதமிழ்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers