Saturday, October 13, 2012

ஆட்சிமொழிப் பாசறை


பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்!
                               ஆட்சிமொழிப் பாசறை கோரிக்கை!



04. 10. 2012   வியாழன் காலையில் சின்னப்போரூர், செந்தில்நகரில்  உள்ள  நாம் தமிழர் அரங்கத்தில்,                                       செந்தமிழன் சீமான் அவர்கள் நாம்தமிழர் ஆட்சிமொழிப் பாசறையைத் தொடங்கி வைத்தார்கள். தமிழ்க்கொடி நாகராசன் தமிழிசை பாடினார்.
மறத்தமிழன் வரவேற்கிறார்
புறநானூறு பற்றி முனைவர் பா.இறையரசன்,  தமிழ் மொழி திரிந்து உலகளாவிய மொழிகளாகத் திகழ்வது பற்றிப் பொறிஞர் அருட்கண்ணனார், இலக்கியமும் அறிவியலும் பற்றி மருத்துவர் இளவஞ்சி ஆகியோர்  பேசினர். மறைமலை அடிகளின் பேரன் மறை. தி. தாயுமானவன், மறத்தமிழ் வேந்தன் ஆகியோர் தனித்தமிழ் பற்றிப் பேசினர். சித்தமருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், கரந்தைப் பேராசிரியர் முனைவர் செல்லன் ஆகியோரும் பெருந்திரளான தமிழன்பர்களும் இளைஞர்களும் பெண்களும் பங்கேற்றனர். 


செந்தமிழன் சீமான் பாசறையைத் தொடங்கிவைக்கிறார்

      ஒரு இனத்தின் அழிவு மொழியை இழந்தால் நிகழும்; அதனால் மொழியைக் காக்கவேண்டும். மொழி விடுதலையே இனவிடுதலை. இனம் விடுதலையடைந்தால் ஆட்சியிலும் விடுதலை பெறலாம். வடமொழிக் கலப்பால் தமிழிலிருந்து திரிந்து தெலுங்கு முதலிய மொழிகள் பிறந்தன. தமிழர்கள் வாழ்க்கையில் பேச்சு வழக்கில் கூட ஆங்கிலம் அதிகமாகக் கலந்துவிட்டது. எனவே தமிங்கிலத்திடமிருந்து தமிழைக் காக்க வேண்டும் என்று சீமான் பேசினார். 


மறை.தி தாயுமானவன் பேசுகிறார்
 
வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் பேசுகையில், பல்லாவரம் மலைத்தொடர்களில் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலக் கோடரிகளை புரூசுஃபுட் கண்டுபிடித்து 150 ஆண்டுகளாவதை ஒட்டி,  மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்திற்கு எதிரில் உள்ள அம்மலைப் பகுதியில் பன்னாட்டுத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப் பெறவேண்டும் என்றார்.
அரசு பள்ளி,கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி மட்டுமே இருக்கவேண்டும்; தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகள் தரப்படவேண்டும்.
செம்மொழி நிறுவனம், திராவிடப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ஆட்சிக்குழுவில் தமிழே தெரியாதவர்கள் அமர்த்தப்படக் கூடாது.  பாவாணரின் பெயரைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திற்குச் சூட்டவேண்டும்; அவருக்குச் சென்னையில் இதுவரை சிலை இல்லாததால்,  அமைக்கப்படவேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. காஞ்சி எழிலரசன் நன்றி கூறினார். 



No comments:

Post a Comment

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers