Sunday, September 11, 2011

“இன்றே போல்க நும் புணர்ச்சி”


                     
                        பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை நீக்கக்கோரி கடந்த 28 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மக்கள்மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி தீக்குளித்து இறந்தார். ஊர்வலமாக 7 மணி நேரம் சென்று, செங்கொடியின் சொந்த ஊரான மேல்கதிர்பூர் மங்கல்பாடியில்   பூங்காவில் செங்கொடியின் வீர உடல் நல்லடக்கம் செய்யப்பெற்றது. குற்றவாளிகள் அல்லாத மூவர் மேல் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நீக்கக் கோரி சென்னை கோயம்பேட்டில் சாகும்வரை உண்ணாநிலைப்போராட்டம் நடத்திய மூன்று பெண் வழக்கறிஞர்கள் அங்கயற்கண்ணி என்கிற கயல்விழி, வடிவு, சுசாதா  ஆகிய மூவரும்  வந்திருந்த மகளிரும் ஆர்வலர்களும் கண்ணீர் விடுக் கதறி அழுதனர்.

                 செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது. வீரவணக்க இரங்கல் கூட்டத்தில் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான், நல்லக்கண்ணு, பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, பெரியார் திராவிட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசப் பொது உடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன், அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி ஐசக், இயக்குர் அமீர், சேரன்,மணிவண்ணன், நடிகர் சத்தியராசு உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள், மனித உரிமை அமைப்பினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

                 அரசியல் கட்சித்தலைவர்கள் ஆளுக்கொரு  நாள் உண்ணாநிலைப்போராட்டம், மனிதச்சங்கிலி, மறியல் எனப் பிரிந்து செயல்பட்டு வந்த நிலையச் செங்கொடி தன் உயிரீந்து மாற்றினாள் என்று தமிழின ஆதரவாளர்கள் பேசினர். எல்லா வகையிலும் தான் விட்டுக்கொடுத்துத் தமிழர் நலனுக்காகப் போராடவருவதாகத் திருமாவளவன் கூறியதையும், எவ்விடத்திலும் கட்சிக் கொடியையோ முழக்கத்தையோ செய்யக்கூடாது என்று தடுத்துவைத்திருந்த வைக்கோவின் பெருந்தன்மையையும், ஒற்றுமையான களத்தை உருவாக்கிய சீமானையும்  அனைவரும் பாராட்டினர். கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் திரண்டு கண்ணீருடன் கூடியிருந்ததைக் கண்டபோது, அரசியல் தலைவர்களும் ஒன்றுபட்டு மேடையில் இருந்ததைப் பாராட்டி, “இதே போல் ஒற்றுமையாக இருந்தால், இராச பக்சேயை ஐ.நா.குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும்; இரண்டு மாதத்திற்குப் பின் வழக்கு நடக்கும் போது தூக்குத்தண்டனையிலிருந்து மூவரையும் காப்பாற்றி விடுதலை பெறச் செய்ய முடியும்; ஈழத்தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் காப்பாற்ற முடியும்; காவிரி பாலாறு உரிமைகளையும் பெற்றுவிட முடியும்” என்ற நம்பிக்கை துளிர்த்தது. தமக்குள் போரிட்டுக்கொண்டிருந்த மூவேந்தர்களையும் ஒன்றாகக் கண்ட பொழுது ஔவையார் மகிழ்ந்து,  “இன்றே போல்க நும் புணர்ச்சி” என்று வாழ்த்தினார் அல்லவா! அவ்வாறு நாமும் செங்கொடியை வணங்கி தன்னலம் மறந்து மக்கள் நலத்திற்காக ஒற்றுமையாகிய அனைத்துஅரசியல் தலைவர்களையும் வாழ்த்துவோம்! வாழ்த்துவோம்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, August 1, 2011

இலாரி கிளிண்டனுக்குத் தமிழர்களின் நன்றி!


ஈழத் தமிழர்களுக்குச் சம உரிமை கிடைக்கவேண்டும்

என்ற இலாரி கிளிண்டனுக்குத் தமிழர்களின் நன்றி!


                                    தமிழ் எழுச்சிப் பேரவையின் தலைவர் கோ.கண்ணன் அவர்களும் செயலர் முனைவர் இறையரசனும் 
இலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து ஈழத் தமிழர்கள் சிங்களர்களுக்குச் சமமான உரிமையுடன் வாழவேண்டும் என்றும் முதற்கட்டமாக விரைவில் நல்லமுறையில் குடியமர்த்தப்பெற வேண்டும் என்றும் கூறியதற்கு உலகத் தமிழ் இனத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அவ்வறிக்கையில்,
                                     அமெரிக்கப்பெருநாட்டின் வெளியுறவுத் துறைசெயலராக விளங்கும் பெருமைக்குரிய இலாரி கிளிண்டன் தமிழக முதல்வரை அவரது அலுவலகத்துக்கே சென்று சந்தித்தது தமிழர்களுக்குச் செய்த பெருமையாகும் என்றும், இது இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த இராசபக்சேயைப் போர்க்குற்றாவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், இலங்கையின் மேல் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றத்தில் செயலலிதா கொண்டுவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

                                    வடக்கு மாநிலத்தின் பெரும்பான்மைப் பகுதிகளில் சிங்கள இராணுவம் இன்னும் உள்ளது; முள்வேளி முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்; வீடு வாசலற்ற அவர்கள் உடமைகளை இழந்து உண்ண உணவின்றி,குடிக்க நீரின்றி மருத்துவ வசதிகளின்றி, எந்நேரம் வேண்டுமானாலும் விசாரணை என்ற பெயரில் கொல்லப் படலாம் என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.; அவர்களுடைய வீடுகளில் சிங்கள இனத்தவர் குடியேற்றப்பட்டுள்ளனர்.


 இந்நிலையில் அங்கே தேர்தல் நடத்துவதாக நாடமாடி வருகின்றனர். 

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்கள், சிங்களர்களுக்குச் சமமான உரிமைகளுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்று இலாரி கிளிண்டன் கூறியுள்ளது நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. இராச பட்சே நடத்திய இனப்படுகொலையை- போர்க்குற்றங்களை அமெரிக்கப்பாராளு மன்றத்தில் திரைப்படமாகப் பார்த்த உறுப்பினர்கள் கண்ணீர் விட்டுள்ளனர்.தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் நிறவேற்ற்ப்பட்ட தீர்மானத்தை அடியொற்றி இந்திய அரசும் இராச பட்சேயின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா.வை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் இலாரிகிளிண்டன் வற்புறுத்த வேண்டுகிறோம்; சிங்கள் அரசின் மேல் பொருளாதாரத் தடை கொண்டுவரவும் வேண்டுகிறோம்.

போர்க்குற்றங்கள் நடந்துள்ள சூழ்நிலையில் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டகுழந்தைகளையும் பெண்களையும் முதியோர்களையும் காக்க உடனடியாக உலக நாடுகள் அவை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஆவன செய்யவும் கண்காணிக்கத் துறவிகளாகிய அக்னிவேஷ், ஸ்ரீ ரவிசங்கர், தமிழக முதலமைச்சர் சார்பில் ஓர் அமைச்சர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழ் எழுச்சிப் பேரவையின் சார்பில் கோரியுள்ளனர்.

இலாரிகிளிண்டன் தமிழக முதல்வரைச் சந்திக்கும் செய்தியை முதலில் வெளியிட்டதுடன் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்திய மாலைமுரசு இதழுக்குத் தமிழ் எழுச்சிப் பேரவையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tuesday, March 8, 2011

கணினியில் ஆரியச் சூழ்ச்சி


கணினியில் ஆரியச் சூழ்ச்சி
-முனைவர் பா. இறையரசன்


தமிழ் எழுத்துகளே தாய்

குமரிக்கண்டத்தை அடுத்துத் தோன்றிய சிந்துநாடு (இந்தியா) முழுதும் குறிப்பாகத் தென்னாட்டின்  குகைகளிலெல்லாம் ஆசீவக அல்லது சமண அல்லது புத்த மத முனிவர்கள்  தங்கியிருந்தனர். தங்கியிருந்தவர்களின்  பெயர்களும், தங்கியிருந்தவர்களுக்கு உதவியவர்களின் பெயர்களும் , உதவிய வகையும் பிறவும் ஆங்காங்குள்ள கல்வெட்டுகளில் தமிழி எழுத்துகளில்  பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த எழுத்தை  வடநாட்டில் பிராமி எழுத்துகள் என்று குறித்தனர். எனினும் அசோகன் கல்வெட்டில் காணப்படும் பிராமி எழுத்துகளில் வடமொழியிலுள்ள வல்லின எழுத்து களுக்கான வருக்க எழுத்துக் குறியீடுகள் உள்ளதாலும், தமிழ் நாட்டிலுள்ள இந்தக் கல்வெட்டுகளில் அந்த வருக்க எழுத்துக் குறியீடுகள் யாண்டும் காணப்படாததாலும், மேலும், சிறப் பாகத் தமிழ் மொழிக்கே  உரிய ற,   ன, ழ, எ, ஒ   ஆகிய எழுத்துகள் காணப்படுவதாலும் இதனைத் தமிழி என்று பெயரிட்டு வழங்கி வருகின் றனர். 

இந்தத்  தமிழ் எழுத்து நிலை யிலும், காலத்தால் முந்தியவை  தாமிழி என்றும், திராவிடி என்றும், பிற்கால எழுத்தைத் தமிழி என்றும் வழங்கி வரு கின்றனர். ஆரியச் சார்பினர் தமிழ் அல்லது தமிழி எனக்குறிக்க விரும் பாமல் வடபிராமி, தென்பிராமி (திராவிடி) என்றே கூறிவருகின்றனர்.

வர்த்தமானர்  கி.மு.527  இல் கால மானார். அவருக்குப் பல ஆண்டுகட்குப் பிறகு  (கி.மு. 317 _ 297)  பத்திரபாகு முனிவர் தலைவரானார். இவர் மோரிய சந்திர குப்தரின் ஆசிரியராவார்.  இவர் மகத நாட்டில் 12 ஆண்டுகள்  வற்கடம் தோன்றுவதை முன்னறிவித்துத் தமது   மாணாக்கருடன் தென்னகம் வந்தார். கன்னட நாட்டில் சரவண வெள்ளைக் குளம்  (சரவண பெல கொலா) என்ற இடத்தில் தங்கினார். 

அவர் சீடரில் ஒருவர் விசாகர். இவர்  பாண்டிய நாட்டில் சமயம் பரப்பினார்.  கி.மு. 297 இல் பத்திரபாகு முனிவர் வடக் கிருந்து (சல்லேகனை  செய்து) உயிர் விட்டார். அரிசேனரின் பிருகத்கதாவி லும், தேவசந்திரரின் கன்னட இராஜா வளியிலும் இவ்வரலாறு சொல்லப்பட் டுள்ளது. சந்திரகிரியில் பத்திரபாகுவின் குகையும், சந்திரகுப்தரின் புதைவிடமும்  (சமாதியும்) உள்ளன. 

பாண்டி நாட்டி லுள்ள தமிழிக் கல்வெட்டுகள்  கி.மு. 3 ஆம் நூற்றாண்டின.  க என்னும் எழுத்து  அசோகன் கல்வெட்டிலும் தமிழ் நாட்டிலுள்ள  புகழூர்க்  கல் வெட்டிலும் சிலுவைக்குறி  அல்லது கூட்டல்குறி  வடிவில் செதுக்கப்பட்டி ருக்கும். 

மீனாட்சிபுரம் கல்வெட்டு,  அசோகர் கல்வெட்டைவிடக் காலத் தால் முந்தியது  என்னும்  உண்மை எல்லா  அறிஞர்களாலும் ஒப்புக் கொள் ளப்பட்டுள்ளது. இந்த மீனாட்சிபுரம் கல்வெட்டில் மேலே கண்ட கூட்டல் அல்லது சிலுவைக்குறி  காணப்படுமே யானால்,  அதனைக் க  என்று  படிக் காமல்  க்  என்று படிக்க வேண்டிய  நிலை உள்ளது. க என்று படிப்பதற்கு மீனாட்சிபுரம் கல்வெட்டு அமைப்பில் சிலுவைக்குறியின் உச்சிப் பகுதியை ஒட்டி  வலப்புறமாகச்  சிறுகோடு  போடப்பட்டிருக்கும்.   

இந்த  எழுத்து வடிவம்  அசோகன் கல்வெட்டிலோ,  புகழூர்க்  கல்வெட்டிலோ  காணப்படு மேயானால்  கா  என்று  நெடிலாகப் படிக்க வேண்டும்.  இந்த வேறுபாடு  நோக்கியும் இதனை  அசோகனுக்கு   முந்தைய எழுத்து  என உறுதி செய்ய லாம்.


வடநாட்டுத் தமிழி எழுத்துமுறை  மாகதி, அர்த்த மாகதி, கரோட்டி எனப் பல சிறுசிறு மாறுபாடுடைய எழுத்து களாக வழங்கின. தென்னாட்டில்  தமிழி எழுத்துமுறையும்  வட்டெழுத்து முறையும் வழங்கின.  

பனை ஓலையில் எழுத்தாணியால் தமிழி எழுத்துகளை மேலும் கீழும் சுழித்து வளைத்து எழுதி யவையே வட்டெழுத்துகளாகும். சமணர் களும் பவுத்தர்களும்  ஆரியர்களுடைய  பாகதமொழியைப் பின்பற்றிப் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளைத்  தம் சமய மொழிகளாக உருவாக்கிக்  கொண்டனர்.   

வேதகாலத்து பாகத மொழி வழக்கற்றுப்  போனதால் பிரா கிருதத்தில் இருந்து   புதிதாகச் செய்யப் பட்ட மொழிதான் சமற்கிருதம்  (சமஸ்: செய்யப்பட்ட; கிருதம்: மொழி)  ஆகும்.  எழுத்து வழக்கற்ற இந்த மொழிகள்  தமிழி எழுத்துகளைக் கொண்டு   ஆரிய ஒலிகளுக்கான  சில குறியீடு களையும் சேர்த்து கிரந்தம் என்ற எழுத்து முறையை கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் உருவாக்கிக் கொண்டன. 

தென்னாட்டில் தமிழி எழுத்துகளைப் பனைஓலைகளில் எழுதிவந்தனர்; வடநாட்டில் இலை அல்லது தோலில் எழுதியதால் இந்தக் கிரந்த எழுத்துகளை மேலே கோடிட்டு எழுதியதால் தேவநாகரி எழுத்துமுறை கி.பி.12ஆம் நூற்றாண்டு அளவில் தோன்றியது.

தமிழே தாய்மொழி

இந்தியா முழுவதும் பலுச்சித்தானம் வரை தமிழ் மொழியே வழங்கி வந்தது.  ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசித்தானில் பேசப்படும் தமிழ் மொழிக் குடும்பத்துப் பிராகூய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், வடஇந்திய தமிழ் மொழிக் குடும்பத்திலுள்ளவை ஒரோவன், முண்டா,இராசுமகால்,கூ அல்லதுகோந்த், பத்ரீ, மால்தோ முதலியவை.  

நடு (மத்திய) இந்திய கோலமி, நயினி, , பர்கி, ஒல்லாரி, கூய், கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குரூக், மோசுரா முதலியவை. தென்னிந் தியாவில் தமிழின் கிளை மொழி களாகிப்போன தோடம் (துதம்) , கோத்தம், படுகு, கோண்டு, வடகோலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. 

இவை எழுத்தில்லா மொழிகள். கன்ன டமும் துளுவும்கூட அண்மைக்காலம் வரை எழுத்தில்லாமல் இருந்தன. ஆகவே பர்மா பலுச்சித்தானம் வரை  விளங்கிய தொல்இந்தியா (சிந்து நாடு) முழுதும் தமிழும் தமிழ் எழுத்து முறையும், ஆரியப் படையெடுப்பால் சிதைந்த வட திரிபு (திராவிட) மொழிகளுமே இருந்தன.

வடநாட்டில் நந்தர்  மோரியர் களுக்குப் பிறகு அசோகன் காலத்தில் சமண புத்த மதங்கள் மட்டும்தான் செல்வாக்கோடு இருந்தன.  சங்கம் மருவிய காலத்தில் சமண புத்த மதங்கள் தமிழ் நாட்டினுள் நுழைந்தன. 

கி.பி. மூன்று முதல் ஏழு நூற்றாண்டுவரை இந்தியா முழுவதும் சமண புத்த மதங்கள்  செல்வக்கோடு இருந்ததால்  பாலியும் பிராகிருதமுமே  ஆட்சி மொழியாகவும் விளங்கின. வடநாட்டில்  சாதவாகனர்களும் தென்னாட்டில் பல்லவர் பாண்டியர் ஆகியோரும் சமண புத்த மதங்களை ஒடுக்கி சைவ வைணவ மதங்களையும் சமற்கிருதத் தையும்  வளர்த்தனர். 

எனவே கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல்  7ஆம் நூற்றாண்டு வரை  இந்திய அரசர்களுடைய ஆட்சி மொழியாக  சமற்கிருதமும் எழுத்து முறையாக கிரந்தமும் விளங்கின. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பின் மக்கள்மொழியாகிய தமிழ்  புத்துணர்ச்சி பெற்றது. மதத்தின் பிடியில்  அரசர் களும் ஆட்சியும் இருந்ததால்  சமற் கிருதக் கல்வியே எங்கும் ஓங்கி இருந்தது. நாளந்தா, காஞ்சிபுரம், எண்ணாயிரம் போன்ற இடங்களில்  சமற்கிருதக் கல்வி நிலையங்களே விளங்கின. 

இவற்றை யெல்லாம் மீறி மக்கள் மொழிகளும் இலக்கியங்களும் வளர்ந்து கொண்டு தான் இருந்தன. கிறித்துவ மதத்தின் மொழியாக இலத்தின்  விளங்கியதையும் மீறி மேலை நாட்டு மொழிகள் வளர்ந் தன. ஆட்சி மொழியாகவும் வணிக மொழியாகவும் ஆங்கிலம் வளர்ந்ததால்  கிறித்துவ சமய மொழியாகவும்  ஏற்கப் பட்டு சமற்கிருதம்போல் இலத்தினும் உலகவழக்கு அழிந்து ஒழிந்தது.  மதப் பற்றின் காரணமாக  சமற்கிருத சொற்களையும் ஒலிகளையும் அதிகம் ஏற்றுக்கொண்ட  மொழிகள்  திரிந்து  திருந்தா  திராவிட மொழிகளாகவும்  வடநாட்டு மொழிகளாகவும் சிதைந்தன. 

தென்னாட்டில்  முதலில் தெலுங்கும்  பின் கன்னடமும்  அடுத்து மலையாள முமாகத் தமிழ் திரிந்தது.  ஆரியக் கலப் பால்  கி.பி.8ஆம் நூற்றாண்டுக்குள்ளாக வடநாட்டில் தமிழ் படிப்படியே திரிந்து  வடதிராவிட மொழிகள் ஆயின. கி.பி.9 வாக்கில்  தெலுங்கும் 10 நூ. வாக்கில் கன்னடமும் 12 நூ. வாக்கில் மலையாள மும் தமிழில் இருந்து பிரிந்து தனித்து இயங்கத் தொடங்கின. 

சேர  வேந்தர்  குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாகவிருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டுப்  போனதி னால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழி களினுங் கேடாகச் சிதைந்து, மணிப் பிரவாள  மொழியாக  வழங்கி வருகின்றது (செந்தமிழ் சிறப்பு  பக்கம் 99) என்று 

பக்கம் 2

5-03-2011 ஞாயிறுமலர் பக்கம்2

Thursday, December 9, 2010

கல்வியும் மரக்கன்றும்

                           தெம்மாவூரில் சிங்கப்பூர் தெம்மாங்கு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையிலிருந்து உள்ளே 10 கல் தொலைவில் படு மோசமான சாலையில் இருக்கிறது தெம்மாவூர் என்கிற சிற்றூர். அந்த ஊரையும் தாண்டி வீடுகள் குடிசைகள் எதுவுமே கண்ணில் படாத இட்த்தில் ஐந்துஆறு இளைஞர்கள் சிறு மேடை அமைத்துக் கொண்டிருந்தனர். ஒரு வண்டியில் பெண்கள் வந்து இறங்கினர். வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்கள் கைகளில் சிறு இலையைக் கொடுத்து அதில் தயிர்சோறு அளித்தனர். அடுத்து வந்த வண்டியில் ரெட்டிப்பாளையம்  இசைக் கலைஞர்கள் 
சோறெல்லாம் வேண்டாம்மா என்று கூறிவிட்டு நெருப்பை மூட்டிப் பறைகளுக்குச் சூடேற்றினர். பறை ஒலிக்கு ஏற்ப அவர்கள் ஆடத்தொடங்கினர்.  தாரை, தப்பு, மேளம் 

என்று அவர்கள் அடித்த அடியில் சுற்று வட்டாரமே அதிர்ந்தது.





சிறிது நேரத்தில் அந்த மிகச்சிறிய சாலையில் ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து  சீன மாணவர்கள் கிடுகிடுவென இறங்கி ஒடோடி வந்தனர். அடுத்து மலாய் மாணவர்கள் சிலர் வந்தனர். கடைசியாகத் தமிழ் மாணவர்கள் சிலர் வந்தனர். மொத்தம் இருபது பேர் இருக்கும்,  ஆட்டம்போடத் தொடங்கினர். ஆனால் ரெட்டிப்  பாளையம் குழுவினரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் விழா தொடங்கியது.
      அறக்கட்டளையின்  செயலர் முனைவர் பா.இறையரசன் தலைமை ஏற்று எழுத்தேணி அறக்கட்டளை பற்றி விளக்கினார். பள்ளி, மாணவரில்லம் ஆகியவற்றுடன் இயற்கைஉழவு சார்ந்த விளைநிலம் என்னும் திட்டத்தில் இன்று மரக்கன்று நடும் விழா இங்கே நடைபெறுகிறது என்றும்,ம்முடைய மாணவர் சகாயராசு சிங்கப்பூர் ஃபூச்சூன் பள்ளியில் தமிழாசிரியர் ஆகி, இன்றைக்கு 20 மாணவர்களுடன் சுற்றுலா வந்துள்ளார்  என்றும் அவர் கூறியதும்தான் வந்துள்ள சீன மலாய், தமிழ் மாணவர்கள் சுற்றுலா வந்தவர்கள் என்று தெரிந்தது.

அறக்கட்டளையின் நிறுவனர் சகாயராசு வரவேற்றார். மாணவர்களிடமிருந்தோ, பெற்றோர்களிடமிருந்தோ, பொதுமக்களிடமிருந்தோ நன்கொடையோ கல்விக்கட்டணமோ பெறாமல் இலவயக்கல்வி தர, பள்ளி, விடுதி ஆகியவற்றுடன் அமைந்த விளைநிலத்தில் இயற்கை உழவு மேற்கொள்ளப்பெறும்; முதலில் ஆழிப்பேரலை (சுனாமி) முதலிய இயற்கை ஏதங்களால் உறவிழந்த (அனாதை) குழந்தைகள், தாழ்த்தப்பெற்ற ஊனமுற்ற ஏழை மாணவர்கள் சேர்க்கப்பெறுவர் என்று சகாயராசு கூறினார்.

              சென்னையிலிருந்து வந்திருந்த வரலாற்றறிஞர் கோ.கண்ணன் (முன்னாள் பாரத வங்கி அதிகாரி) தமிழகத்துக்கும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பைச் சீனப்பயணிகள் பதிவு செய்துள்ளனர்; சுற்றுலா வந்துள்ள சீன, மலாய், சிங்கபுர மாணவர்களை வரவேற்கிறேன் என்றார்.
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வித்துறையின் துணை இயக்குநர் திரு அ. மதிவாணன் சீன மலாய் மாணவர்களுக்காக ஆங்கிலத்தில் பேசினார். கல்வி, வரலாறு, இலக்கியம் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்று நினைக்கும் சகாயராசை விட அவரது பெற்றோரைப் பாரட்டவேண்டும் என்று கூறி அவரது தந்தையார் திரு டேவிட் அவர்கள் கையை உயர்த்தி, அனைவரையும் கைதட்டிப் பாராட்டச் செய்தார்.  “தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”  ஆகவும் “அவையத்து முந்தியிருப்பச்” செய்த தந்தையாகவும் நெகிழ்ந்தார் டேவிட். அவருக்கு ஃபூச்சூன் பள்ளி சார்பில் அப்பள்ளியின் ஆசிரியர் திரு வே. பச்சைப்பெருமாள் நினைவுப்பரிசு வழங்கிச் சிறப்பு செய்தார். இசை விய ஆசிரியர் எஃசுடீ லிம் தமிழகப்பயணமும் இவ்விழாவும் மறக்கமுடியாதவை என்று கூறினார். மாணவன் தௌபீக்கும் மாணவி துரியாட்சிணியும் தங்கள் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்விப் பயிர் வளர்க்கும் இம்முயற்சிக்குத் தொடக்கத்தில் இருந்தே ஒத்துழைப்பு நல்கி வரும் இயற்கை உழவியல் இயக்க இளைஞர்கள் ஆனந்தராசும் பிரசன்னாவும்  மரக்கன்றுகளைக் கொண்டு வந்திருந்தனர். பள்ளிக்கட்டடம் கட்டவுள்ள நிலத்தின் நான்கெல்லையிலும் வந்திருந்த மாணவர்களும் விருந்தினர்களும் மரக்கன்றுகளை நட்டனர்.அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராகிய தங்கமணி ஆவார்.
வண்டியில் வந்து தயிர்சோறு அளித்த அந்த பெண்கள் மறுபடியும் வண்டியில் ஏதோ கொண்டு வந்தனர்; எல்லோருக்கும் அவர்கள் நெல்லிக்கனியும், சுக்குத்தண்ணியும் (காப்பியும்) கொடுத்தனர். கொடுத்தவர்கள் வேறு யாருமில்லை சகாயராசு என்னும் அந்த ஆசிரியரின்அக்கா, தங்கைகள்தான். வண்டியை ஓட்டிவந்தவர்கள் அவரது தங்கை கணவரும் தம்பிகளும்தான். குடும்பம் ஒரு கோயில் என்பார்கள். சகாயராசு குடும்பத்தினர் அனைவரும் ஒரு தென்னந்தோப்பாக இருந்து உலகத்தரமுடைய இலவயக்கல்வி, மாணவர் இல்லம், இயற்கைஉழவியல் உணவு உற்பத்தி ஆகிய ஆலமரத்தோப்புக்கு மரக்கன்று விழா நடத்தியுள்ளனர்.




விரைவில் செயற்கை உரமோ பூச்சிமருந்துகளோ இடாமல்  காய்கறிகளும் தானியங்களும், மூலிகைகளும் இங்கே விளையும்;  நல்ல கல்வி பெற்ற மாணவச்செல்வங்களும் தோன்றுவார்கள்.
                                         -செய்தியாளர்: அ.வள்ளி. 




Sunday, December 5, 2010

கிரந்த எழுத்துத் திணிப்புக்கு எதிர்ப்பு

natpu
டந்த நவ.3ஆம் நாள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம், தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.
பேராசிரியர் பா.இறையரசன் தலைமை தாங்கினார். அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரையாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாட கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத் தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன்,  பொறி. அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப்  பலரும்  தீர்மானங்களை வழி மொழிந்தனர்.
கூட்டத்தில்பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார்,  பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணையதளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில்  இடம்பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள்  இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpu
4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.
5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி  இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.
7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.
8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.
9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.
natpu
10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.
11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  இதேபோல் நல்ல தமிழில் வரும்  இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றி அரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின்  விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும். கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற்சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.
12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும்பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழர்கள் மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
natpuவரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.
தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம்பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே  இணையதளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.
தொடக்கவுரையில் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார்.  அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய இலக்குவனார் திருவள்ளுவன்  தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று  நடைபெற இருந்த ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு  இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போகமாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.
பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.
நன்றி: நட்பூ இணைய இதழ்

Saturday, November 27, 2010

“மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?”

                
சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் அமைந்திருக்கும் எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் 23.11.2010 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மணிப்பிரவாளத்திற்கு மறுவாழ்வா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தேறியது. 
தமிழார்வலர்கள் கூடிய இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக கெ.பக்தவத்சலம் அவர்கள் வரவேற்புரையில் பேசியதாவது, “தொல்காப்பியர் காலத்தில் இருந்தே பாலி மொழி இருந்தது. பின் சமஸ்கிருதமே இந்தியாவில் பெரும்பங்கு வகித்தது. அப்போது சமஸ்கிருதத்திற்கு இணையாக வந்ததே உருதுமொழி. சமஸ்கிருதத்திலிருந்து ஜ, , , க்ஷ, ஸ போன்ற எழுத்துகள் மிழுக்கு வந்தன.  தமிழ்மொழியை விட மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிறமொழிக் கலப்பு அதிகமாவே இருந்தது.
தமிழில் வடமொழி கலந்து மணிப்பிரவாள நடையை  சமணர்கள் உருவாக்கினர். இதை இறுதியாக வைணவர்கள் வளர்த்தார்கள். இப்படி பல மொழிகளிலிருந்த சொற்கள் தமிழை ஆக்கிரமித்து வருகின்றன. எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிடும் நீங்கள் இராசாசி எனக் குறிப்பிடுவதேன் என முரசொலிக்கு ஒரு முறை மூதறிஞர் இராசாசி மடல் எழுதினார். இராஜாஜி என எழுதத் தொடங்கினர்.

பவளம் சிவப்பு நிறத்தில் இருக்கும். வடமொழியாளர் தமிழை மாணிக்கமாகக் கருதினர். தமிழில் பவளம் என்பதை வடமொழியில் பிரவாளம் என மாற்றினர். இது போலவே விளக்கவுரை என்பதை வியாக்கியானம் என்றும், பாயிரம் என்பதை பிரவேசம் என்றும், வேட்டியை வேஷ்டி எனவும் மாற்றினர். பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை  ஷாட்க்ஷி என்று எழுதிவந்ததை மாற்றி  சாட்சி என எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழுக்குள் ஆங்கிலம் புகுந்துவிட்டது. இன்று தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தில் கூட அர்ஜூனனும், பீமனும் தமிங்கிலத்தில் பேசுவது தாங்க முடியாத ஒன்றாகும். எனவே தமிழர்களாகிய நாம் பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுவதோடும் பேசுவதோடும் தமிழ் அழிவைக் காப்பதும் நமது கடமையாகும்என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப் பேசிய பேராசிரியர் பா.இறையரசன் பேசியதாவது,     “1930-களில் தமிழிசை வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள்  போராட்டம் நடத்தியதைக் கண்ட மற்ற மொழியினர் இவர்களுடைய மொழியில் இசையே இல்லையா? எனக் கேலி பேசியதுண்டு. தமிழார்வலர்களாகிய நம்மை தமிழ் உணர்ச்சி மட்டுமே வழி நடத்துகிறது. நாடெல்லாம் நடந்து தமிழைப் பரப்பிய அக்கால ஆழ்வார், நாயன்மார்களாலும் , பிற்காலத்தில் பெரியார் போன்றவர்களாலும் தமிழ் மொழியும் இனமும் பாதுகாக்கப்பட்ட. ஆனால் இன்றோ தமிழின் நிலை தலைகீழாகிப் போனது.
நான் ஆத்திகன்தான், அதற்காக சமற்கிருதத்தை விட தமிழ்மொழி குறைந்தது இல்லை. தமிழ் தாத்தா என அழைக்கப்பெறும் உ.வே.சாமிநாத ஐயரிடம் வணக்கம்என்று கூறினால் நமஸ்காரம்என்று கூறுங்கள் என்பார். கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் சமஸ்கிருதம் எழுத்து வடிவம் பெற்றுள்ளது. கி.பி.3-ம் நூற்றாண்டில்தான் ராமாயணம், மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றன. நம்மை வேதம் படிக்கக் கூடாது என்றனர். வேதம் கி.பி.14-ல்தான் எழுதப்பட்டது.
 இன்று படிக்கின்ற குழந்தைகள் “Thosaiyamma thosai” என ஆங்கிலத்தில் தமிழை எழுதிப் படிக்கும் அவல நிலை உள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டாமா? வடமொழியை தேவ பாஷை என்றும் தமிழை நீச்ச பாஷை என்றும் கூறி வந்தனர் சிலர். இவர்கள் தமிழில் சமற்கிருதம் கலந்து மணிப்பிரவாள நடையை ஏற்படுத்தினர். சோற்றை சாதம் என மாற்றினர்.
தமிழை வளர்க்க வேண்டும் என்கிறீர்களே, வளர்ப்பதற்கு அது என்ன தாடியா எனக் கேலி பேசுகிறார் திரைக்கவிஞர் வாலி.
அன்று சமற்கிருதம் வந்து தமிழைக் கெடுத்தது போல் இன்று ஆங்கிலம் தமிழில் புகுந்து தமிங்கலம் ஆகிவிட்டது. ற, , , ஒ என்ற இந்த ஐந்து எழுத்துக்களையும் கிரந்த எழுத்தில் சேர்க்க வேண்டும் என ஒருவர் முயல்கின்றார்; இன்னொருவர் 26 கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்க்க வேண்டும் என்கின்றார்.
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு என்றனர். தமிழனுக்கு இரண்டு குணம். ஒன்று ஒற்றுமையின்மை, மற்றொன்று காட்டிக் கொடுத்தல்.
ஆரிய இதழான அமுத சுரபியில் பாரதியாரின் செந்தமிழ் நாடெனும் போதினிலேஎன்ற பாடலை ஸெந்தமிழ் நாடெனும் போதினிலேஎன எழுதி தமிழை இழிவுபடுத்துகின்றனர். மேலும் கலைஞர், திருமா, வைகோ, சீமான் போன்றோரை ஈழ மக்களின் துரோகி என எழுதி தமிழர்களுக்குள் கலகம் மூட்டுகின்றனர். மாவீரன் முத்துக்குமார், ஈழத்தமிழரைக் காக்க இறந்தபோது தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து போராட வரவில்லை. எனது கனவெல்லாம் இனி தமிழை அறிவியல், கணினித் தமிழாக மாற்ற வேண்டும் என்பதேஎனப் பேசினார்.
இறுதியாகத் தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் பேசியதாவது : 
தமிழ் இன வரலாற்றில் இடம்பெறக்கூடிய முக்கியமான நிகழ்விது. இணைய இதழான நட்பூபோன்ற இதழ்கள் தமிழுக்கு அரும்பணி ஆற்றி வருகின்றன. கிரந்தம் என்றால் என்ன? சமஸ்கிருத எழுத்துக்களை தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல்மொழி எழுத்துக்களை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால் நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமற்கிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.
மணிப்பிரவாள நடைக்காக தமிழ் எழுத்துகளில் க1, 2, 3, 4 என்பது போல் 26 கிரந்த எழுத்துக்களைப் புகுத்த முதலில் திட்டமிட்டனர். பின் எ, , , , ன ஆகிய தமிழ் எழுத்துக்களையும் தமிழ் எண்களையும் கிரந்தத்தில் சேர்த்து 89 குறியீடுகளுக்காக்க்  கருத்துரு அளிக்கப்பட்டது.  இதனால் தமிழ், விரிவாக்கத் தமிழாக வளர்ச்சி பெறுவதாகவும் கதை கூறப்பட்டது. மேலும் தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்து மொழிகளையும் கிரந்த எழுத்து கொண்டே எழுத முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் இந்தியா ஒரே நாடாக விளங்க அனைத்து மொழிகளையும் எழுதக் கூடிய கிரந்த எழுத்துக்களைத்தான் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்துவதுதான் இதன் உள்நோக்கம்.

இப்பொழுது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவதால் பஸ், ஜாமின், மிக்ஸி, ஜாம், ஷவர் முதலான அயற்சொற்கள் நம்மிடையே புகுந்துவிட்டன. ஜ சில இடங்களில் (ஜமுனா யமுனா என்பது போல்) ய என மாறும். (ஹரி என்பது அரி எனப்படுவது போல்) ஹ என்பது அ என மாறும்.  இவ்வாறு உரிய முறைக்கேற்ப பெயர்ச் சொற்களை மட்டும் இவ்வாறு எழுதிவிட்டுப் பிற சொற்களை உரிய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி புஜம் தோள், ஸர்ப்பம் பாம்பு, ஸந்தோஷம் மகிழ்ச்சி, லஷ்மி திருமகள், ஹர்த்தால் மறியல் அல்ல்து கதவடைப்பு, ஸ்ரீநகர் திருநகர் என எழுத வேண்டும்.  

      இன்றைய தலைமுறையினர் தமிழில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழ்ப் பெயர் சூட்டியவர்கள் பிள்ளைகள்கூட அவ்வாறுள்ளனர். இந்தச் சமுதாய அவலத்தின் எடுத்துக்காட்டுதான் கலைஞரின் குடும்பத்தினரும் சன் டி.வி., சன் பிக்சர்ஸ்,ரெட் ஜெயண்ட், க்ளவுடு நைன் எனப் பெயர் வைத்துள்ளார்கள்;  பாரே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக விளங்கி நிறுவனங்கள், படத் தலைப்புகள். கதைப்பாத்திரங்களின் பெயர்கள் என அனைத்திலும் தமிழ்ப் பெயர்களையே வைக்க வேண்டும். கிரந்த எழுத்துகளின் பயன்பாடு உள்ளதால்தான் பிற மொழிப் பெயர்களைக் கையாளுகிறோம். எனவே பாட நூல்களில் தமிழ் என்ற பெயரில் கிரந்த எழுத்துகள் புகுந்துள்ளதை அடியோடு நீக்க வேண்டும். கிரந்தஒழிப்பு இயக்கம் நடத்தியாவது நாம் வெற்றி காண வேண்டும்- என இலக்குவனார் திருவள்ளுவன் பேசினார்.
      இறுதியில் கேள்வி நேரம் வந்தது. வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு, மொழிச் சீர்திருத்தம் பற்றியும், மொழி வளர்ச்சி பற்றியும், எதிர்காலத்தில் தமிழினை எவ்வித வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என்பதுபற்றியும் காரசாரமான பேச்சு வார்த்தை நடத்தினர். கூட்டத்திற்கு வந்திருந்த ஐம்பது பேரில் 48 பேர் முதியவர்கள் என்பதால் அடுத்த முறை இளைஞர்களை இணைக்க வேண்டும் என்றும், தமிழுக்கு உரியவற்றைச் செய்யாத ஆட்சியாளர்கள், பிறமொழிகளைத் திணிப்பவர்கள், எதிர்க்காத பொதுமக்கள் என இருக்கும் வரை தமிழ் முன்னேற முடியாது என்ற பேச்சுக்கள் அனல் வீசின. வந்த ஒரு தமிழார்வலர் ஆட்சி, அலுவல், நீதிமன்றம் போன்ற இடங்களில் ஆங்கிலமும், வடமொழியுமே ஆட்சி செய்கின்றன, தமிழுக்கு மதிப்பில்லை என குறைபட்டுக் கொண்டார். மேலும் ஒருவர் 1967-லிலேயே தமிழ் ஆட்சிக்கு வந்துவிட்டது. 43 ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை (அதுவும் 100க்கு  20 பேருக்கு) அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
இரண்டு தெலுங்கன் சந்தித்தால் தெலுங்கில் பேசுகிறான், இரண்டு மலையாளி சந்தித்தால் மலையாளத்தில் பேசுகிறான். இரண்டு தமிழன் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுகிறான். தமிழன், தமிழில் பேசுவதை என்று உயரியதாக நினைக்கிறானோ  அன்றுதான்  தமிழ் வாழும். இல்லையேல் பாரதி கூற்றுக்கிணங்க மெல்ல தமிழ் இனி (தமிழனால்) சாகும்!!

நன்றி: “நட்பூ” இணைய இதழ் – 24-11-2010 திரு க.சித்திரசேனன்  செய்திக்கட்டுரை.

Tuesday, November 9, 2010

கிரந்த எழுத்து தமிழில் திணிப்பு!

தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வாறே யின்றளவு மிருக்கின்றன. சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத்  தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக்கொள்ளு  மியல்புடைய  ஆரியர்  தமிழ்நாட்டிற் கேற்றபடி,  தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’  என்னும்  பெயரிற் புதுவதோர்  இலிபி  வகுத்தனர்.. . . .  தமிழுஞ்  சம்ஸ்கிருதமுங்  கலந்த மொழி கேள்விக்கின்பம் பயக்கு  மென்ற  போலியெண்ணமே  இத்தகைய  ஆபாச மொழி  யொன்று  வகுக்குமாறு  தூண்டிற்று.”  என்று பரிதிமாற்கலைஞர் எழுதுவார்.

“பாரதி – பிறமொழிச்  சொற்களைத்  தமிழில் எழுதுவதற்கு  குறியீடுகள்  உருவாக்க  வேண்டும்  என்று  1916 – ல் ஞானபானு  இதழில்  “தமிழில் எழுத்துக்குறை” என்றத்  தலைப்பில்  எழுதினார். விடுதலைப்போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து நின்றவரும் , அன்போடு உறவுமுறையில் “மாமா” என்று அழைத்தவரும் ஆகிய வ.உ.சிதம்பரனார் இதனால் தமிழின் ஒலிப்புமுறைக்கும் தனித்தன்மைக்கும் கேடு நிகழும் என்றும் கூறி இதனைக்கடுமையாக எதிர்த்தார்.

ஒருங்குறி மூலமாக சமற்கிருதத்தை புகுத்தவும்தமிழைச் சிதைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தமிழுக்குக் கேடு செய்வன. மொழி என்பது ஒலி அடிப்படையிலானது. தமிழ் ஒலிமுறையைக்காக்க வேற்றொலிகள் வராமல் காக்க வேண்டும்.   வடமொழி ஒலிகள் (கிரந்த எழுத்தின் மூலம் ) ஈட்டுரையில் புகுத்தினர். அது தோல்வி அடைந்தது (மு.வ.- இலக்கிய வரலாறு) 5 கிரந்த எழுத்துக்கள் மட்டும் நிலைத்தன். அவற்றையும் பெரிதும் புறக்கணித்து வருகிறோம். வட எழுத்துமுறை - கிரந்தம்- வர்க்க எழுத்துகள் இவற்றை அதிகம் கலந்ததனால்தான் தெலுங்கு,  கன்னடம், மலையாளம் தமிழிலிருந்து சிதைவால் தோன்றின.  இனியும் தமிழைச் சிதைக்க விடவேண்டாம்.

கிரந்தத்தில் தமிழின் சிறப்பு எழுத்துகளாகிய எ, , , ன என்ற 5 எழுத்துகளைச் சேருங்கள் என்று திரு நாக.கணேசன் முயல்கிறார் என்றால் கிரந்த எழுத்தின் தூய்மையைக் காக்க வேண்டியவர்கள்தானே கவலைப்பட வேண்டும்! நாங்கள் எங்கள் தமிழில்- தமிழ் ஒருங்கு குறியில் -  தமிழின் ஒலிச்சிறப்பையும் தனித்தன்மையையும் கெடுக்கும் வகையில்  தமிழோடு அதன் எழுத்துக்களாகக் காட்டும் வகையில் - கிரந்த எழுத்துகள் 5 ( ,, , , க்‌ஷ) சேர்க்கக்கூடாது என்றோம்; ஆனால், அவை முன்பே தமிழ்ப் பாடப்புத்தகத்தில் கூட உள்ளன என்று வாதாடி அதனைச் சேர்த்தார்கள்! இப்போது- தமிழ் எழுத்துகளோடு- மேலும் 26 எழுத்துகளைச்  சேர்க்கவேண்டும் என்பதல்லவா இரமண சர்மாவின் கோரிக்கை! இதற்கும் 1916-இல் காஞ்சி காமகோடி பீடத்தால் வெளியிடப்பெற்ற நூலை சர்மா எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வொலிகள் தமிழுடன் முரண்படுபவை. அதனால்தான் புத்த, சமணமதத்தினராலும் ஈட்டுரையாசிரியர்களாலும் கொண்டுவரப்பட்ட மணிப்பவழ(பிரவாள) நடை தோற்றது. தமிழில் கிரந்த எழுத்துகளைச்சேர்த்துத் தமிழின் தனித்தன்மையைக் கெடுத்து, மேலும் கன்னடம் மலையாளம் போல் சிதைக்க முயலும் இக்கேட்டைத் தடுக்கவேண்டும் என்பதுதான் தமிழ் எழுத்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்னும் எங்களின் கருத்து.

உயிராகிய மொழி எழுத்தாகிய உடலில்தான் தங்கியுள்ளது எனவே எழுத்தைச் சிதைக்கக் கூடாதுஎன செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு மாறாக நாம் சில கிரந்த எழுத்துகளைப் புகுத்தியதால்தான் தமிழ் மொழி பல புதிய மொழிகளாகச் சிதைவுற்றது. தற்காலத் தமிழ் என்ற பெயரில் அகராதிகளில் சார், டீச்சர் முதலான பல ஆங்கிலச் சொற்கள் தமிழாகக் காட்டப்பட்டுள்ளன. இப்பொழுது புகுத்தமுயலும் முறையால் தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளும் தமிழ்ச் சொற்களஞ்சியத்தில் சமற்கிருதசொற்களும் புகுந்து, தமிழ் மலையாளம் மொழி 2 என அழைக்கப்படும் வகையில் திரிவுறும். இதனால் பழந்தமிழ் இலக்கிய அழிவும் இன அழிவும் ஏற்படும். ஆதலின் உடனடியாக இந்திய அரசு சார்பில் முன்மொழியப்பட்ட ஒருங்குறி கருத்துருவை திரும்பப் பெறவேண்டும். மேலும்  செப்பேடு, ஓலைச்சுவடிகளில், வடமொழி சார்ந்த நூல்களில் அச்சிட மொழியியல் குறியீடுகள் போதும்.

 எனப் பிரஞ்சு நாட்டுத்தமிழறிஞர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அவர்கள் கருத்தையும் பார்வைக்கு வைக்கிறோம்.
1 கிரந்த எழுத்துகள் இல்லாமலே இயங்கி வந்த தமிழ் இனியும் அப்படியே தங்கு தடை
இன்றி இயங்கும். 
2 ஐந்து எழுத்தால் ஆன  பாடை  இல்லை தமிழ்! ஆகவே கிரந்த எழுத்துகள் தமிழுக்குத்
தேவை இல்லை. மொழி இயலார் பயன்படுத்தும் குறியீடுகளை (IPA - International Phonetic alphabets)
 பயன்படுத்தியே அத்தனைத் தமிழ் ஒலிப்புகளையும் எழுதிக்காட்ட இயலும். அப்படி
இருக்க, ஏன் இந்தக் கிரந்த எழுத்துகள்
3 இன்றைய கணிப்பொறி அறிவியல், தொழில் நுட்பம், ஒருங்குறியீடுகள் முதலியன ...தமிழ்
எழுத்துகளை எழுதத் தேவையான வசதிகளைக் கொண்டுள்ளன. இந்தச் சூழலில் கிரந்த
எழுத்துகள் வலிந்து நுழைக்கப் படுவது தமிழின் அறிவியல். தொழில்நுட்பவியல், இலக்கியவியல் வளர்ச்சியைத் தடுக்கும்.
4 கிரந்த எழுத்துகள் கட்டாயத் திணிப்பு வன்புணர்ச்சிக்கு ஈடாகும். தமிழ்த் தாய்
சீர்குலைப்புக்கு ஏதாகும் . 
இப்படி இன்னும் அடுக்கிகொண்டே போகலாம். எப்படி இருப்பினும்,
கிரந்த எழுத்துகளின் படையெடுப்பை முறியடிக்க வேண்டிய கடமை தமிழறிஞர்களுக்கு
மட்டும் அல்ல, எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு. 

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers